கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் குறிப்பாக வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் போன்றவற்றை குறித்த திணைக்களங்களிடமிருந்து அபிவிருத்தியின் பொருட்டு விடுவித்தல் தொடர்பாகவும், சமூக சக்தி நிதி ஒதுக்கீடுகள், மீள்குடியேற்ற வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆரயப்படவுள்ளன.
யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் காணி, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.
திட்டங்கள் ஆயிரம்; தீர்வு கிடைக்குமா இந்நேரம்? – கிளிநொச்சியில் அதிகாரிகள் பட்டாளம்!
