சட்டவிரோத நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி மோசடிகள் தொடர்பான 1,000-க்கும் அதிகமான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு,
தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகள், பிரமிட் திட்டங்கள் மூலம் பணம் பெறல், அனுமதியில்லா கடன் திட்டங்கள், மக்களை ஏமாற்றி தவறாக வழிநடத்தும் மோசடி நிதி திட்டங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியதாக பொலிஸ் தினைக்களம் கூறியுள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 40 நபர்களின் சொத்துகள் மற்றும் உடைமைகள் குறித்தும் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சட்டவிரோத வழிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட இச்சொத்துகளை எதிர்காலத்தில் பறிமுதல் செய்வதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் தினைக்களம் தெரிவித்துள்ளது.
