உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் நள்ளிரவு அரசியல் அதிர்ச்சி – அருண் சித்தார்தின் வீட்டிற்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் தாயக மக்கள் கட்சி அலுவலகத்திற்கு நள்ளிரவு தீவைத்த தாக்குதலுக்குப் பின்னர் சேதமடைந்த கட்டிடம்

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சி அலுவலகம் மீது நள்ளிரவு தீவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (13) இரவு 12.50 மணியளவில், இனந்தெரியாத நபர்கள் இந்த பரபரப்பான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும், கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டிடமே இலக்காகக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டிடத்தின் முன் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகின்றது. தீப்பற்றியதன் காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்