யூரோப்பின் மிகப்பெரிய கடல் காற்றாலை நிறுவனம் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் 5 பில்லியன் டொலர் மதிப்புள்ள “Revolution Wind” திட்டத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கு எதிராக வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தை நாடியுள்ளது.
டென்மார்க் நிறுவனமான ஒரஸ்ட் மற்றும் அதன் கூட்டாளர் Skyborn Renewablesஅமெரிக்க அரசின் முடிவை சட்டவிரோதமாகவும் திட்டத்திற்கு பெரிய நஸ்ட்டம் ஏற்படுத்தும் வகையிலும் குற்றம்சாட்டி, தீர்மானத்தை ரத்து செய்ய நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
Revolution Wind திட்டம் 2023-ல் அனைத்து மாநில மற்றும் கூட்டாட்சி அனுமதிகளையும் பெற்றது. தற்போதைய கட்டுமானம் 90 வீதம் நிறைவடைந்து, 2026 முதல் அமெரிக்க வீடுகளுக்கு ‘நம்பகமான மற்றும் மலிவான மின்சாரம்’ வழங்க தொடங்கும் நிலையில் உள்ளது. தற்போது 65 காற்றாலை மோட்டார்கள் உட்பட அனைத்து அடித்தளங்களங்களும் நிறுவப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசு ‘தேசிய பாதுகாப்பு காரணங்கள்’ என்று கூறி, கடந்த டிசம்பர் 22 அன்று ஐந்து பெரிய கடல் காற்றாலை திட்டங்களை தற்காலிக நிறுத்தியுள்ளது. இதனால் ஒரஸ்ட் பங்குகளின் சந்தை மதிப்பு சரிவடைந்தது. நீதிமன்ற நடவடிக்கை இதற்கு எதிரான ஓர் முக்கிய நடவடிக்கை எனவே, பங்குகள் மீண்டும் சற்றே உயர்ந்துள்ளது.
ஓரஸ்ட் நிறுவனம் குறித்த சட்ட நடவடிக்கையினால், திட்டத்தை முழுமையாக பாதுகாக்கவும், பணிகளை மறுபடியும் தொடங்கவும் விரும்புகிறது.

