உலகம் செய்திகள் வினோத உலகம்

2025 ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்!

2025 ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த ஒரு விமானம் பற்றிய செய்தி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2025-ம் ஆண்டு தொடங்கிய பிறகு, ஹாங்காங்கில் இருந்து பயணிக்கத் தொடங்கிய கேத்தே பசிபிக் விமானம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை அடைந்தபோது புத்தாண்டு பிறக்கவில்லை.

அதன்படி, இந்த விமானம் எதிர்காலத்தில் இருந்து  வந்த காலப்பயணம் என்று பலரால் அழைக்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் தங்களது பயணத்தின் இடையே சர்வதேச திகதிக் கோட்டை (IDL) கடந்ததால் இரண்டு முறை புத்தாண்டைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது.

சர்வதேச திகதிக் கோடு (IDL) என்பது பசிபிக் பெருங்கடலின் குறுக்கே வரையப்பட்ட ஒரு கற்பனைக் கோடு என்பதுடன், இது இரண்டு தொடர்ச்சியான நாட்காட்டி நாட்களைக் குறிக்கிறது.

அதாவது, சர்வதேச திகதிக் கோட்டின் குறுக்கே கிழக்கு நோக்கிப் பயணிக்கும் எவரும் காலப்போக்கில் ஒரு நாள் பின்னோக்கிப் பயணிக்கிறார்கள், மேலும் மேற்கு நோக்கிப் பயணிக்கும் எவரும் ஒரு நாள் முன்னோக்கிப் பயணிக்கிறார்கள்.

எனவே, இந்த பயணிகள் ஜனவரி 1, 2025 அன்று அதிகாலையில் ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டு, டிசம்பர் 31, 2024  மாலை லொஸ் ஏஞ்சல்ஸை சென்றடைந்தனர்.

இதையும் படியுங்கள்>அமெரிக்காவில் வாகன தாக்குதல் 10 பேர் பலி 30 பேர் காயம்

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்