‘இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 19 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்களைக் குவித்தது.
அபாரமாக விளையாடிய குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார்.
அவருக்குப் பக்கபலமாக ஜனித் லியனகே 46 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் துனித் வெல்லாலகே அதிரடியாக 25 ஓட்டங்களையும் விளாசினர்.
272 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, இலங்கையின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
ஜோ ரூட் மற்றும் பென் டக்கட் தலா 60 ஓட்டங்களைக் கடந்த போதிலும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை தரப்பில் பிரமோத் மதுஷான் 3 விக்கெட்டுகளையும், துனித் வெல்லாலகே மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.’
