திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பாலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் மேலும் ஐந்து பேர் என மொத்தம் 9 பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 16ஆம் திகதி திருகோணமலை போதிராஜ விஹார வளாகத்தில் கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தை மீறி அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த சிலையை அகற்ற அதிகாரிகள் முயன்றபோது, பௌத்த பிக்குகளும் அப்பகுதி மக்களும் அதற்கு எதிர்ப்பு வெளியிடடதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலை அமைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் நீதிமன்றத்தில் முறைப்பாடு தாக்கல் செய்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
