உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் ட்ரோன் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் – 250 கிராம் மேற்பட்ட ட்ரோன்கள் கட்டாய பதிவு

இலங்கையில் ட்ரோன் பயன்பாட்டுக்கு புதிய சட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக சிவில் விமான சேவைகள் ஆணைக்குழு அறிவிப்பு

இதற்கமைய, சிவில் விமான சேவைகள் ஆணைக்குழு ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் விதமான சட்டவடிவமைப்பை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

சிவில் விமான சேவைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், 250 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுடைய அனைத்து ட்ரோன்களும், வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என கூறினார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள ட்ரோன் தொடர்பான விதிமுறைகள் இவ்வருடத்திலிருந்து கடுமையாக அமல்படுத்தப்படவுள்ளதாகவும், அதேவேளை 250 கிராமுக்கு குறைவான எடையுடைய பொம்மை ட்ரோன்களுக்கு இந்த ஒழுங்குமுறைகள் பொருந்தாது எனவும் அவர் விளக்கினார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்