உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவின் உறவில் ஈடுபட்ட இளம் ஜோடிக்கு 140 கசை அடி யுவதி மயங்கினார்.

இந்தோனேசியாவின் ஆசே மாகாணத்தில், ஷரியா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திருமணத்திற்கு வெளியான பாலியல் உறவும் மதுபானம் அருந்தியதற்கும் ஒரு இளம் ஜோடி பொதுமக்கள் முன்னிலையில் மொத்தம் 140 கசை அடி தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
21 வயதுடைய பெண் தண்டனை வழங்கும் போது மயங்கியதால், பெண் அதிகாரிகள் அவரை ஆம்புலன்சில் அனுப்பினர்.

அதே நாளில், இஸ்லாமிய மதப் பொலிஸ் படை அதிகாரி ஒருவர் உட்பட மேலும் நால்வரும் ஷரியா சட்ட மீறலில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

குறிப்பாக, அந்த அதிகாரி தனியிடத்தில் பெண் ஒருவருடன் இருந்த குற்றச்சாட்டில் 23 கசை அடிகள் பெற்றதுடன், அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசே மாகாணத்தில் இஸ்லாமிய சட்ட மீறல்களுக்கு கசை அடி தண்டனை வழங்குவது வழக்கமானதாக இருந்தாலும், மனித உரிமை அமைப்புகள் இதை மனிதாபிமானமற்றதாக விமர்சித்து வருகின்றன.

அங்கு நடைமுறையில் உள்ள சட்டப்படி, திருமணத்திற்கு வெளியான பாலியல் உறவுக்கு 100 கசை அடிகளும், மதுபானம் அருந்துவதற்கு 40 கசை அடிகளும் தண்டனையாக விதிக்கப்படுகின்றன.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இத்தண்டனைகள் முறையாக ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும், தண்டனைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் விதிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்