தமிழின அழிப்பு புதியவை

திராய்க்கேணிப் படுகொலை..! 06.08.1990

thiraikeni massacre 1990 | Pathivu News

1954ஆம் ஆண்டு அமரர் தர்மரட்ணம் என்பவரின் தென்னந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட குடியேற்றக் கிராமம் திராய்க்கேணியாகும். திராய்க்கேணிக்கு கிழக்குப் பக்கத்தில் ஒலுவில் கிராமமும் தெற்குப் பக்கத்தில் பாலமுனையும் அமைந்துள்ளது. இக்கிராமம் அட்டாளைச்சேனை உதவிஅரசாங்க அதிபர் பிரிவின் கீழும் அக்கரைப்பற்று நீதிமன்று நியாதிக்கத்தின் கீழும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் முன்நூற்றெழுபதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் முன்நூற்றைம்பது வீடுகளில் வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் பிரதான தொழில் விவசாயமாகும்.

1990.08.05 இல் திராய்க்கேணியில் வசித்து வந்த இஸ்லாமியர்களில் ஒருவர் காட்டுக்குச் சென்றவேளை மர்மமான முறையில் உயிரிழந்த்தைத் தொடர்ந்து 1990.08.06 அன்று அக்கிராமத்திலிருந்த நூறு – நூற்றைம்பது பேர் கொண்ட இஸ்லாமியக் குழு திராய்க் கேணியிலிருநத் தமிழர்களைத் தாக்கினார்கள்.

தாக்கக் கத்தி, வாள், பொல்லு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன், வீடுகளையும் அவர்களின் உடைமைகளையும் தீயிட்டு எரித்தார்கள். முசுலிம்களின் தாக்குதல் தீவிரமடைய கிராமமக்கள் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலில் அடைக்கலம் புகுந்தார்கள். கோயிலுக்குள் நுழைந்த இஸ்லாமிய குழுக்கள் அடைக்கலம் புகுந்த மக்களை வாள்களால் வெட்டியும் கத்தியாற் குத்தியும் தாக்கினார்கள். இவர்களின் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு தாக்குதல் நடாத்திக்கொண்டுருக்கும் போது கோயிலுக்கு வெளியில் சிறிலங்கா இராணுவத்தினர் பவள் கவச வாகனத்தில் தாக்குதல் நடத்துபவர்களுக்குப் பாதுகாப்பினை வழங்கிக்கொண்டிருந்தார்கள். எஞ்சியிருந்த நூற்றிஐம்பது குடும்பத்தினர் அகதி முகாமுக்குச் சென்றனர்.

தாக்குதலில் தொண்ணூறிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். முன்நூற்றுநாற்பதிற்கும் மேற்பட்ட வீடுகளும், எழுபது மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியான சொத்துக்களும் எரிக்கப்பட்டன.

06.08.1990 அன்று திராய்க்கேணிப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

இளையதம்பி மயிலாப்பொடி
இராமக்குட்டி மயில்வாகனம் (வயது 18 – தொழிலாளி)
இராசதுரை பிரகலா
நாகலிங்கம் தம்பிராசா
நல்லதம்பி புலேந்திரன் (வயது 27 – தொழிலாளி)
கனகரத்தினம் அழகையா (வயது 35 – ஊழியர்)
கனகரட்ணம் சுப்ரமணியம்
கந்தக்குட்டி பூபாலப்பிள்ளை (வயது 19 – தொழிலாளி)
கந்தக்குட்டி வேலாயுதம்
கா.பாஸ்கரலிங்கம் (வயது 39 – தொழிலாளி)
கா.சாமித்தம்பி (வயது 43 – விவசாயம்)
காந்தன் நவரட்ணம்
காளிக்குட்டி பாக்கியராசா
காளிக்குட்டி தம்பிப்பிள்ளை
கதிரன் கணபதி
கதிரன் பாக்கியராசா (வயது 34 – தொழிலாளி)
கணபதி காளிக்குட்டி (வயது 50 – ஊழியர்)
கணபதி காளிமுத்து (வயது 45 – வைத்தியர்)
கணபதிப்பிள்ளை கிருஷ்ணன்
கணபதிப்பிள்ளை அமிர்தலிங்கம்
பூபாலப்பிள்ளை புலேந்திரன் (வயது 30 – தொழிலாளி)
பூபாலப்பிள்ளை ஏகாம்பரம் (வயது 24 – தொழிலாளி)
தம்பியப்பா கோபால் (வயது 50 – தொழிலாளி)
தம்பிமுத்து ஆனந்தராசா
மு.கணபதி (வயது 76 – தொழிலாளி)
மா.குஞ்சித்தம்பி (வயது 50 – தொழிலாளி)
மா.ஜெயசீலன் (வயது 24 – தொழிலாளி)
மார்க்கண்டு கிருபை (வயது 30 – தொழிலாளி)
மார்க்கண்டு மயில்வாகனம்
மார்க்கண்டு ஜெயக்குமார்
முருகன் இளையதம்பி (வயது 39 – தொழிலாளி)
முருகேசு நாகேந்திரன் (வயது 28 – தொழிலாளி)
பொன்னன் அழகையா (வயது 29 – தொழிலாளி)
செல்லையா பாக்கியராசா (வயது 26 – தொழிலாளி)
செல்வம் சீனித்தம்பி
செல்லத்துரை கிருஸ்டியன்
செல்லத்துரை பாலச்சந்திரன்
செல்லத்துரை அமிர்தலிங்கம்
வேலன் கதிரேசப்பிள்ளை (வயது 44 – தொழிலாளி)
வேலுப்பிள்ளை குணராசா
வேலுப்பிள்ளை பாஸ்கரலிங்கம் (வயது 35 – தொழிலாளி)
சாமித்தம்பி நாகராசா
சாமித்தம்பி சௌந்தராஜன்
சின்னத்தம்பி கன்னி
சின்னத்தம்பி தம்பிப்பிள்ளை
சின்னத்தம்பி சிவசிதம்பரம்
சற்குணம் இளையதம்பி
சற்குணம் விஜயலட்சுமி
வ.பாக்கியராசா (வயது 26 – தொழிலாளி)
விஸ்வலிங்கம் அழகை
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

Pathivu News Pathivu News Pathivu News Pathivu NewsPathivu News

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp