13 வயது பாடசாலை சிறுமியை அப் பாடசாலை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளனர்
கிருஸ்ணகிரி அருகே 8-ம் வகுப்பு சிறுமி பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: கிருஸ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் 13 வயது அரசுப் பள்ளிச் சிறுமி, பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்களே மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது ஒரு சமூகமாக, நாம் மிகப் பெருமளவில் தோல்வி அடைந்திருக்கிறோம் என்பதையே […]








