உள்ளூர்

வவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றுமாறு நகரசபை உத்தரவு!

  • Dec 9, 2024 - 06:59 AM
  • 0 Comments

வவுனியா நகரில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ஆகியவற்றில் வியாபாரத்தை முன்னெடுத்துவரும் நடைபாதை கடைகளை அகற்றுமாறே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை 10 ஆம் திகதிக்கு முன்னராக இவ்வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளதுடன், அந்த தினத்தில் அகற்றப்படாது விட்டால் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை முன்னெடுக்கும் என்று செயலாளரால் கடிதம் மூலம் […]

செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடக்கும் ஆனால் நடக்காது

  • Dec 7, 2024 - 07:29 PM
  • 0 Comments

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அது பிற்போடப்பட்டதாக அதன் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டார். 2023ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான வரைவுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அண்மையில் அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. […]

செய்திகள்

மண்டையிலிருந்த கொண்டையை மறந்த சபாநாயகர் அசோகரன்வல

  • Dec 6, 2024 - 06:04 PM
  • 0 Comments

சபாநாயகர் அசோகரன்வல ஒரு பட்டதாரி என்பதை அவர் நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என தெரிவித்துள்ள மகிந்ததேசப்பிரிய தேசிய மக்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேர்மையான அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றுள்ள மகிந்த தேசப்பிரிய இவ்வாறு சொன்னதால் தற்போதைய சபாநாயகர் அசோகரன்வல ஓல். எல் தாண்டவில்லையா என மக்கள் […]

உள்ளூர்

வடக்கில் இந்தியாவும் சீனாவும் முதலீட்டில் போட்டி?

  • Dec 4, 2024 - 10:28 AM
  • 0 Comments

இந்திய 15 முதலீட்டாளர்கள் 15 பேர் யாழ் வரவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடத்தும் வடமாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நேற்று (03) காலை ஆரம்பமானது . மூன்று நாட்கள் நடைபெறும் வட மாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் […]

செய்திகள்

அனர்த்த நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இரவு 9.30 மணிவரை நடைபெறும்

  • Dec 4, 2024 - 09:05 AM
  • 0 Comments

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (4) மாலை. 05.30 மணி தொடக்கம் இன்று இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நேற்று (03) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன இதன் அடிப்படையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று (4) காலை 9.30 மணி முதல் இன்று மாலை […]

உள்ளூர் செய்திகள்

இனவாதத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த இடமளியோம் – நலிந்த ஜயதிஸ்ஸ

  • Dec 3, 2024 - 11:43 PM
  • 0 Comments

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் […]

உள்ளூர் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்க நியமனம்.

  • Dec 2, 2024 - 10:10 PM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெகுஜன ஊடக அமைச்சராகவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் பணியாற்றினார். இதையும் படியுங்கள்> முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அத்துடன், அமைச்சரவை ஊடகப் பேச்சாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கயந்த கருணாதிலக்க 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு 

  • Dec 2, 2024 - 09:27 PM
  • 0 Comments

நிர்வாகத்தில் இடம்பெறும் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதையும் படியுங்கள்>ரணிலும் சஜித்தும் இணைய வேண்டுமென இருதரப்பும் விரும்புகின்றது- முஜிபுர் ரஹ்மான் சாலையில் இடம்பெறும் நிர்வாக ரீதியில் பிரச்சனைகளை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காமையால் தாம் இன்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமையை அடுத்து பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது     https://www.facebook.com/share/p/19Ug2nWjc5/ […]

உள்ளூர் செய்திகள்

மீண்டும் வானிலையில் ஏற்பட்ட மாற்றம்.

  • Dec 2, 2024 - 10:05 AM
  • 0 Comments

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை இல்லாத வானிலை காணப்படும். வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக […]

செய்திகள்

வெள்ள அனர்த்ததால் 12 பேர் பலி- 3 இலட்சம் பேர் பாதிப்பு

  • Nov 28, 2024 - 12:26 PM
  • 0 Comments

தொடர் மழை பெய்வதால் இதுவரை 23 மாவட்ட மக்கள் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது 99 ஆயிரத்து 876 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 35 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் சீரற்ற காலநிலையால் 17 பேர் காயமடைந்துள்ள அதே வேளை 2 பேர் காணாமல் போயுள்ளனர். 95 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதே வேளை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp