DCC கூட்டங்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும்..!
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மக்களின் நலன்களையும், அவர்களது உண்மையான எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என முன்னாள் அமைச்சரும், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் முன்னாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையகாலமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதாகவும், உருப்படியான தீர்வுகள் எட்டப்படுவதில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, அதிகாரிகள் மீது வீணான குற்றச்சாட்டுகளைச் சுமத்திவிட்டு, தலைமை தாங்குபவர்கள் […]









