உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பிரஜா சக்தி திட்ட முன்மொழிவு தயாரிப்பு கருத்தரங்கு..!

  • Apr 1, 2026 - 12:35 PM
  • 0 Comments

பொருளாதார ரீதியாக நலிவடைந்த சமூகங்களை வலுவூட்டும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் கீழ் முறையான திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை(31.03.2026) அம்பாறை மாவட்ட செயலக ஆரியத்தன மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ. முனாஸீர் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதன்போது, கிராமிய மட்டத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளை வினைத்திறனாகப் பயன்படுத்துவது தொடர்பிலும், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வர்த்தகத் துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு மாணவன்..!

  • Apr 1, 2026 - 11:37 AM
  • 0 Comments

வெளியாகிய 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சுபைதீன் முஹமட் பர்தான் அகில இலங்கை ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் வர்த்தகத் துறையில் முதலிடம் பெற்றுள்ளது அம்மாணவனுக்கும் இந்த வெற்றியில் பங்கெடுத்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. பரீட்சை திணைக்களத்தின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

விருப்பப்பட்டு கல்வி கற்றால் சாதிப்பது இலகுவான விடயம்..!

  • Apr 1, 2026 - 10:58 AM
  • 0 Comments

வரலாற்று சாதனை படைத்த மாணவன் தெரிவிப்பு கபொத உயர்தரம் 2025ல் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார் குறித்த மாணவன் 2.9400 வெட்டுப்புள்ளிகளுடன் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் சாதனை படைத்த மாணவன் இன்றைய தினம் ஊடகங்களுக்கு தனது சாதனை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் விருப்பப்பட்டு கல்வி கற்றால் சாதிப்பது இலகுவான விடயம் என கூறியுள்ளார். காணொளி இணைப்பு : https://www.facebook.com/share/v/1HKA5VUA2v/ நிருபர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அகில இலங்கை ரீதியில் கிளிநொச்சி மாணவன் முதலிடம்..!

  • Apr 1, 2026 - 10:21 AM
  • 0 Comments

உயர்தரப் பரீட்சை பெறுபேறுளின் படி பௌதீக விஞ்ஞான பாடத்தில் (கணிதப் பிரிவு) தமிழ் மொழி மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார். தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவனே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு(31.03.2026) வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 81 ஆயிரத்து 810 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்த […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கரைக்கு கொண்டு வரப்பட்ட ஆழ்கடலில் பிடிபட்ட படகு..!

  • Apr 1, 2026 - 09:46 AM
  • 0 Comments

போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் தென்மேற்கு திசையில் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த படகில் இருந்த 6 சந்தேகநபர்களுடன் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு செய்தி ஆழ்ந்த துயரத்தையும் மனவேதனையையும் அளிக்கிறது..!

  • Mar 31, 2026 - 12:15 PM
  • 0 Comments

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின் தந்தை” எனப் போற்றப்பட்டு, தமது அறிவும் அர்ப்பணிப்பும் மூலம் எண்ணற்ற திறமையான மருத்துவர்களை உருவாக்கிய பெருமைக்குரிய கல்வியாளர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு செய்தி ஆழ்ந்த துயரத்தையும் மனவேதனையையும் அளிக்கிறது. அன்னார் தமது வாழ்நாளை முழுமையாக மனிதகுல நலனுக்காக அர்ப்பணித்த அரிய மருத்துவ அறிஞர். இலங்கையின் மருத்துவத் துறையில் அவர் பதித்த தடங்கள் என்றும் அழியாதவை. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உயிர் நம்பிக்கையை அளித்ததோடு, […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 128வது சிரார்த்த தின நிகழ்வு..!

  • Mar 31, 2026 - 12:06 PM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 128வது சிரார்த்த தின நிகழ்வு இன்று 31.03.2026 மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் தலைவரும் மாநகர […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல்..!

  • Mar 31, 2026 - 11:44 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் நாவிதன்வெளி பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30.03.2026) மாலை நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் தவிசாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள் தேவைகள் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன இறுதியில் விசேட செய்தியாளர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு..!

  • Mar 31, 2026 - 11:24 AM
  • 0 Comments

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, பொலிஸாருடன் இணைந்து கட்டாக்காலி மாடுகளை திங்கட்கிழமை(30) இரவு பிடித்துள்ளனர். சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பொதுப் போக்குவரத்துக்கப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விடப்பட்ட கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன்இ பெறுமதியான பயிர் வகைகளும் சேதப்படுத்தப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து கட்டாக்காலி மாடுகள் பிடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாக, பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகர் பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொத்து மற்றும் ரைஸ் விலைகள் உயர்வு..!

  • Mar 31, 2026 - 11:06 AM
  • 0 Comments

இன்று (31.03.2026) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் அந்தச் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதன் காரணமாகவே, இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp