காசை சேர்க்கிற வழியை பாருங்கோ- அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்
நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு அறிவுறுத்தினார். நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்த, சுயாதீன நிறுவனம் என்ற வகையில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பு மற்றும் வசதிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கையின் நிதிச் செயற்பாடுகளை செயற்றிறன் மிக்கதாக்குவதற்கு நல்லதொரு பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டமைப்புக்களின் […]









