செய்திகள்

கணவனை காப்பாற்ற சென்ற மனைவியும் உயிரிழப்பு!

  • Nov 29, 2024 - 11:55 AM
  • 0 Comments

புத்தளம் மாவட்டத்தில் முந்தல் 412 ஏக்கர் பகுதியில் நேற்று (28) மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 55 மற்றும் 52 வயதுடைய தம்பதிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், தம்பதியர் வசித்துவந்த வீட்டுக்கு அருகில் சிறிய வியாபார நிலையம் நடத்தி வந்துள்ளனர். வியாபார நிலையத்தில் மின்சார இணைப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதை கணவர் சீர் செய்ய முயன்ற போது அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இந்நிலையில், கணவரை காப்பாற்ற […]

செய்திகள்

முன்னாள் எம்பி மார்; 30 உத்தியோகப்பூர்வ வீடுகளை விடேல்லயாம்

  • Nov 24, 2024 - 04:51 PM
  • 0 Comments

புதிய எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டியுள்ளதால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீடுகளை கையளிக்குமாறு அரசு அறிவித்துள்ளது இதுவரை ஏழு எம்.பி.க்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். முன்னாள் எம்.பி.க்கள் குறித்த குடியிருப்புகளை விட்டு வெளியேறாவிட்டால் அந்த குடியிருப்புகளுக்கான நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கொழும்பில் மாதிவெல வீட்டுத் தொகுதி புதிய நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற […]

செய்திகள்

அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் 3ம் திகதிக்கு ஒத்திவைப்பு

  • Nov 21, 2024 - 12:44 PM
  • 0 Comments

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை நிறைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தை அடுத்த அமர்வுக்காக டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 வரை ஜனாதிபதி ஒத்திவைத்தார்.

செய்திகள்

மத்திய மாகாண ஆளுநரை தென்கொரிய தூதுவர் சந்தித்துள்ளார்

  • Nov 21, 2024 - 10:54 AM
  • 0 Comments

மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ் அபேகோனும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது. இரு நாட்டினதும் நட்புறவு, கல்வி கலாச்சார, சமய, விஞ்ஞான தொழில் நுட்பத்துறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன், இலங்கையில் தென்கொரியா செய்துள்ள முதலீடுகள் தொடர்பாகவும்,கொரியாவில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்பு தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

செய்திகள்

19 போடி ரூபா பெறுமதியாக போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு யுவதி கைது

  • Nov 15, 2024 - 04:32 PM
  • 0 Comments

19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார் 27 வயதுடைய தாய்லாந்து பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று தினம் இரவு 11.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். சந்தேக நபரான தாய்லாந்து பெண்ணை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு […]

செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது

  • Oct 26, 2024 - 04:06 PM
  • 0 Comments

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதியுமான டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 24-ந்தேதி தொடங்கி நடைப்பெற்று வந்தது நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதால் இங்கிலாந்து அணியால் ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் 267 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஜேமி ஸ்மித் 89 ஓட்டங்களும் டக்கெட் 52 ஓட்டங்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நோமன் […]

செய்திகள்

அரரவானி நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

  • Oct 26, 2024 - 11:59 AM
  • 0 Comments

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் முதல் திருநங்கை என வரலாறு படைத்துள்ளார். பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நிமேஷா நன்றி தெரிவித்துள்ளார்.

விளையாட்டு

நிங்போ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் கால் வைத்தனர் செக் நாட்டின் முச்சோவா, ஸ்பெயின் நாட்டின் படோசா.

  • Oct 19, 2024 - 02:54 PM
  • 0 Comments

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெறுகின்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் விளையாடினார். இதில் முதல் செட்டை 2-6 என இழந்த முச்சோவா, அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு ஆட்டத்திற்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரேசில் வீராங்கனை ஹதாத் மையாவை சந்தித்தார். இதில் படோசா 6-3, 6-2 […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp