விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்வியாடெக், எம்மா நவர்ரோ 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

  • Jan 18, 2025 - 07:58 PM
  • 0 Comments

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. 5 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், உலகின் 2-ம் நிலை வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) இன்று காலை நடத்த 3-வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த எம்மா ரடுகானுவை எதிர்கொண்டார். இதில் ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4- வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி 10 நிமிட நேரம் நடந்தது. […]

இந்தியா

மோட்டார் பைக்கில் ஓடியப்படியே காதலியுடன் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த இளம்ஜோடி

  • Jan 18, 2025 - 07:13 PM
  • 0 Comments

‘ரீல்ஸ்’ மோகத்தால் இளைஞர்களும், இளம்பெண்களும் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கான்பூர் நகரை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று பைக்கில் செல்லும் போது ரீல்ஸ் வீடியோ எடுத்த காட்சிகள் இணையத்தில் பரவின. அதில், வாலிபர் தனது காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் உள்ளது. மேலும் அந்த வாலிபர் காதலியை பைக்கில் அமர வைத்தவாறே ஓட்டி செல்கிறார். இருவரும் ஹெல்மெட்டும் அணியவில்லை. மாறாக ஒரு பாடலுக்கு […]

உலகம்

கனடாவில் தேர்தல்களத்திலிருந்து இருந்து முக்கிய வேட்பாளர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர்

  • Jan 18, 2025 - 05:34 AM
  • 0 Comments

கனேடா பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் அதனை தொடர்ந்து புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்ட்டுள்ளது இந்நிலையில் தேர்தலில் இருந்து சில முக்கிய வேட்பாளர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர். கிறிஸ்டியா ஃப்ரீ லேண்ட், கரீனா கோல்ட் மற்றும் மார்கெனரி ஆகியோர் கட்சி தலைமை பொறுப்பிற்கு போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்ற போதிலும் உத்தியோகப்பூர்வமாக அவர்கள் இன்னமும் அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே சில சிரேஸ்ட அமைச்சர்கள் […]

உலகம்

காஸாவுடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணக்கம்

  • Jan 17, 2025 - 09:37 PM
  • 0 Comments

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் காஸாவில் 2023இல் ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது. இந்தப் போரால் 46,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு காஸாவின் மக்கள்தொகையில் 90 வீதமான பேர் இடம்பெயர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களைத் தொலைத்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்கு பின் காஸாவில் நடந்த தாக்குதலில் 113 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, கத்தார் நாடுகளின் […]

இந்தியா

குளிர்பானத்தில் விசம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்த காதலி

  • Jan 17, 2025 - 01:27 PM
  • 0 Comments

இந்தியாவின் கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியிலேயெ இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது சரோன் ராஜ் (வயது 23), பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார் இவர் களியக்காவிளை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா (22) என்பவரை காதலித்து வந்தார். இவர் குமரியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். காதலியின் வீட்டிற்கு காதலன் சென்ற போது காதலியும் அரவது பெற்றோரும் காதலன் குடிப்பதற்கு கசாயமும், குளிர்பானமும் கொடுத்துள்ளனர் அதன் பின்னர் வயிற்றுவலி […]

உள்ளூர்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்கள் மாயம்!

  • Jan 15, 2025 - 01:59 PM
  • 0 Comments

கடந்த காலகட்டத்தில் மாகாண சபைகளுக்குச் சொந்தமான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல் போன வாகனங்களில் பல சொகுசு கார்கள் மற்றும் ஜீப் வண்டிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி மாகாண சபைகளின் பல்வேறு அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களே அவ்வப்போது காணாமல் போயுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அந்த வாகனங்கள் குறித்த தகவல்களைக் கண்டறிய […]

செய்திகள் விளையாட்டு

IPL 2025-பஞ்சாப் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

  • Jan 12, 2025 - 11:26 PM
  • 0 Comments

2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியின் நிர்வாகத்தினர் இன்று இதனைத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் ஸ்ரேயஸ் ஐயரை இந்திய பெறுமதி 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது. ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 2ஆவது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி ஐ.பி.எல் […]

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளையோருக்கிடையில் சாதாரணமாக போதை மாத்திரைகள் பரிமாறப்படுகின்றது

  • Jan 8, 2025 - 03:12 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் மட்டுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்று இரவு (07) கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இளைஞன் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து 50 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

செய்திகள்

தமிழ்த் தேசியக்கட்சிகள் 25 ஆம் திகதி கலந்துரையாட தீர்மானித்துள்ளது

  • Jan 8, 2025 - 08:35 AM
  • 0 Comments

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி கலந்துரையாட திட்டமிட்டுள்ளது புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் பாராளுமன்ற உறுபப்pனர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்கிழமை (07) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் […]

உலகம்

நேபாளத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • Jan 7, 2025 - 09:54 AM
  • 0 Comments

நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. {{CODE1}} நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ள நிலையில் இதனை தொடர்ந்துஇ இந்தியாவின் புதுடில்லிஇ […]