முக்கிய செய்திகள்

மன்னார் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது

  • Jan 9, 2025 - 06:37 PM
  • 0 Comments

மன்னார் சதொச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்று (09) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டோர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், முதலில் மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், ரனித்தா ஞானராஜ் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி புராதணி சிவலிங்கம் ஆகியோர் […]

செய்திகள்

தமிழ்த் தேசியக்கட்சிகள் 25 ஆம் திகதி கலந்துரையாட தீர்மானித்துள்ளது

  • Jan 8, 2025 - 08:35 AM
  • 0 Comments

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி கலந்துரையாட திட்டமிட்டுள்ளது புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் பாராளுமன்ற உறுபப்pனர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்கிழமை (07) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் […]

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மக்கள் அச்சமுற தேவையில்லை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் பொலிஸ் மா அதிபர்

  • Jan 5, 2025 - 06:40 PM
  • 0 Comments

சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ் நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில் கடந்த வாரத்தில் யாழ் நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு […]

உள்ளூர் செய்திகள்

500 மில்லியன் இழப்பீடு கோரும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்!

  • Jan 5, 2025 - 03:00 PM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித வெளியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, 500 மில்லியன் ரூபா முதலீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களுக்காக தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்தல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி சட்டத்தரணி சம்பத் யாலேவத்தவினால் குறித்த கடிதம் […]

செய்திகள்

வந்தார் சொன்னார் சென்றார் மகிந்த புத்தா யோஷித, சீ.ஐ.டீ யிருந்து வெளியேறினார்

  • Jan 3, 2025 - 03:56 PM
  • 0 Comments

பிழையை சரியாய் செய்யும் இராஜபக்ஸக்களின் ஆணியை பிடுங்க முடியாது தவிக்கும் ஜேவிபி அரசாங்கம் யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சுமார் 2 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார் இரண்டு மணித்தியாலங்களின் பின் சொகுசு வாகனத்தில் மெய் பாதுகாவலர்களின் பாதுகாப்போடு மீள […]

செய்திகள்

கடவுச்சீட்டு நகல்களைப் பெற விலை மனு கோர அரசிடம் நிதியில்லை.

  • Jan 2, 2025 - 02:23 PM
  • 0 Comments

நாட்டில் கடவுசீட்டை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க அரசின் போது தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு நகல்கள் ஆண்டின் முதல் பாதிக்கு மட்டுமே போதிய கையிருப்பு இருப்பதாகவும், புதிய கடவுச்சீட்டு நகல்களைப் பெறுவதற்கு விலை மனு கோருவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லாமல் இருப்பதும் கடவுச்சீட்டு நெருக்கடி மேலும் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

  • Jan 1, 2025 - 11:36 AM
  • 0 Comments

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளான இன்று (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறுகின்றதென பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க பேரவை தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய வருடத்தில் ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட […]

கனடா செய்திகள்

கனடிய சுற்றாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

  • Dec 30, 2024 - 01:10 AM
  • 0 Comments

ரொறன்ரோ மற்றும் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் சிறிதளவு வெள்ளம் ஏற்படக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது 20 முதல் 40 மில்லி மீட்டர் வரையிலான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தாழ்நிலைப்பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. நிலப்பகுதி பனி படலத்தினால் சூழ்ந்து இருப்பதனால் மழைநீர் நிலத்திற்குள் உள்ளிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை என […]

விளையாட்டு

வவுனியா மாணவன் வென்றார் வெள்ளி பதக்கம்

  • Dec 26, 2024 - 10:26 AM
  • 0 Comments

இளையோருக்கான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் வு.தரனிதரன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் கடந்த 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இளையோருக்கான குத்துச்சண்டை போட்டி கண்டியில் நடைபெற்றது. இதன்போது 69 – 71 மப எடைப்பிரிவில் போட்டியிட்ட தரனிதரன் இறுதிப்போட்டியில் கண்டி சென் சில்வஸ்ரார்ஸ் கல்லூரி மாணவனை எதிர்கொண்டு இரண்டாம் இடத்தினைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்

உள்ளூர் செய்திகள்

சட்டவாட்சி பலமடைந்தால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்- சிறிநேசன் எம்.பி

  • Dec 25, 2024 - 02:14 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவாட்சியைப் பலப்படுத்தப் போவதாகக் கூறியுள்ள நிலையில் அதனை நடைமுறைபடுத்தினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். சட்டவாட்சி பலமடைந்தால், பாரிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்; ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்கக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளார். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp