செய்திகள் முக்கிய செய்திகள்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘ஹரக் கட்டா’ தப்புவதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்

  • Feb 19, 2025 - 06:12 PM
  • 0 Comments

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நந்துன சிந்தக என்பவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்த சம்பவம் தொடர்பில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று புதன்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இதேவேளைஇ பொலிஸ் கான்ஸ்டபிளுடன் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேக நபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இந்தியாவிலிருந்து இன்றைய தினம் பிற்பகல் கட்டுநாயக்க விமான […]

செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னாரில மணல் அள்ள கள விஜயம் செய்த 23 திணைக்களங்களையும் திருப்பியனுப்பிய மக்கள்

  • Feb 19, 2025 - 05:51 PM
  • 0 Comments

மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கள ஆய்வு செய்து, கனிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை வழங்க சுமார் 23 திணைக்களங்களைச் சேர்ந்த குழுவினர் இன்று அப்பகுதியில் கள விஜயம் செய்தபோதும் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு தடவை கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்றைய தினம் மூன்றாவது தடவையாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் இணுவில் பகுதியில் தாயின் முன்னிலையில் இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல் தலைமறைவு பொலிஸார் அசமந்தம்

  • Feb 19, 2025 - 07:19 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி ,தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரின் விளக்கமறியலை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்துள்ளார். இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் வளப்பற்றாக்குறை உள்ள போதும் வரவு – செலவுத் திட்டத்தில் யாரையும் புறக்கணிக்கவில்லையென சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்

  • Feb 18, 2025 - 05:57 AM
  • 0 Comments

மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவோம். அதற்கான திட்டங்களையும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளோம். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும் வரவு செலவுத் திட்டத்தில் புறக்கணிக்கவில்லை என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (17-02-2025) நடைபெற்ற அமர்வில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்தார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களின் உரிமைகள் […]

முக்கிய செய்திகள்

ஐ.எம்.எப்பின் பணயக் கைதிகளாகியுள்ளனர் ஜனாதிபதியும் அரசாங்கமும்- சஜித் பிரேமதாச

  • Feb 18, 2025 - 05:37 AM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியம் விதித்த கட்டுப்பாட்டுக்குள் இருந்து தயாரிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தையே ஜனாதிபதி முன்வைத்துள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நேற்று (17-02-2025) ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாடு அநுரவுக்கு என்ற கொள்கைப் பிரகடனத்துக்கமைய பெரிய கேக் ஒன்றை தயாரிப்பதாகவே உறுதியளிக்கப்பட்டது. ஆனால், வரவு – செலவுத் திட்ட உரையை பார்க்கும்போது […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஒருவரை கடத்திச் பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது

  • Feb 17, 2025 - 05:10 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (16-02-2025) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் துபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த […]

முக்கிய செய்திகள்

மன்னாரில் மணல் அகழ்வினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்

  • Feb 16, 2025 - 06:25 AM
  • 0 Comments

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலும்,எதிர்கால நலனையும் பாதிக்கின்ற கணிய மணல் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது எனவும் கனிய மணல் அகழ்வுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க முன்னெடுக்கவுள்ள கள விஜயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று(15-02-2025 மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் தீவில் மூன்று திட்டங்கள் […]

முக்கிய செய்திகள்

கிளி பூநகரியில் மதுபானசாலைக்கெதிராக திரண்ட மக்கள்

  • Feb 14, 2025 - 05:56 PM
  • 0 Comments

கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏ32 பிரதான வீதியின் வாடியடி சந்தியை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தியே இப்போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். அதனையடுத்து, பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் தங்களது […]

முக்கிய செய்திகள்

விகாரை விவகாரத்தில் மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாதென்கிறார் அமைச்சர் சந்திரசேகர்

  • Feb 14, 2025 - 05:17 PM
  • 0 Comments

உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரம் விரைவில் தீர்த்து வைக்கப்படுமென கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில், தையிட்டி விகாரை […]

முக்கிய செய்திகள்

பௌத்த அக்தபத்திர மகோற்சவத்திற்கு இலங்கை முழு அணுசரனை வழங்குவதாக ஜனாதிபதியின் செயலாளர் உறுதியளித்துள்ளா

  • Feb 12, 2025 - 06:50 AM
  • 0 Comments

அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவிக்கான அக்தபத்திரம் வழங்கும் மகோற்சவத்தை அரச அனுசரணையுடன் நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இலங்கை அமரபுர மகா பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவி தொடர்பான அக்தபத்திர மகோற்சவத்தை மார்ச் 10 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை அக்தபத்திர மகோற்சவத்திற்கு அரசாங்கத்தினால் வழங்கக் கூடிய அனைத்து ஆதரவையும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp