உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் பொலிஸார் விளக்கம்..!

  • Mar 23, 2026 - 10:29 AM
  • 0 Comments

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. “நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்து உங்கள் அவதானத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனப் பொதுமக்களுக்கு வழிகாட்டுவது போல் அமைந்துள்ள அந்தச் செய்தி, எவ்வகையிலும் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டது அல்ல என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் தரப்பிலிருந்து […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவுறுத்தல்..!

  • Mar 23, 2026 - 10:16 AM
  • 0 Comments

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக பிள்ளைகளுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பிள்ளைகளுக்கு அதிக தூக்கம், உணவில் விருப்பமின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு மேலதிகமாக நீர் மற்றும் திரவ உணவுகளை வழங்குமாறு […]

பதிவு தரிசனம் உள்ளூர் புதியவை

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்ஸவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது..!

  • Mar 23, 2026 - 10:07 AM
  • 0 Comments

தெட்ஷணகைலாசம் எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்ஸவத் திருவிழா நேற்றைய தினம் (22.03.2026) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. ​கொடியேற்றம் (துவஜாரோகணம்) (22.03.2026) காலை 8.00 மணிக்கு அம்பாளின் திருவருளுடன் இடம்பெற்றது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பார். ​இரதோற்சவம் (தேர்த்திருவிழா) 31.03.2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெறும். ​ 01.04.2026 அன்று உதயத்தில் தீர்த்தோற்ஸவமும், அன்று […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத பொருட்களுடன் ஐவர் கைது..!

  • Mar 23, 2026 - 09:57 AM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் 5 பயணிகள் இன்று (23.03.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70,460 வெளிநாட்டு சிகரெட்டுகள், பல்வேறு வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் என்பன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா..!

  • Mar 23, 2026 - 09:51 AM
  • 0 Comments

சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 01.04.2026 புதன்கிழமை காலை 9.30மணி தொடக்கம் 11.46மணி வரையான சுபவேளையில் இடம்பெற்று தொடர்ந்து 45நாட்கள் மண்டலாபிஷேக பெருவிழாவும் இடம்பெறவுள்ளது. கும்பாபிஷேக பெருவிழாவினை முன்னிட்ட கிரியாரம்ப நிகழ்வு 28/03 சனிக்கிழமை காலை 5மணி முதல் இடம்பெற்று 31.03.2026 செவ்வாய்க்கிழமை காலை 8மணி முதல் மாலை 5மணி வரை எண்ணெய் காப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. மேற்படி கும்பாபிஷேக பெருவிழா சிவஸ்ரீ கி.சோமசுந்தரக் குருக்கள்,சிவஸ்ரீ செ.பரமானந்தக்குருக்கள் ஆகியோரின் […]

செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 23, 2026 - 09:33 AM
  • 0 Comments

23.03.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை..!

  • Mar 20, 2026 - 01:41 PM
  • 0 Comments

இலங்கை வாழ். முஸ்லிம்கள் நாளை (21.03.2026) நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையில், இன்று (20.03.2026) காலை 6.30 மணியளவில் காத்தான்குடி கடற்கரையில் சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு..!

  • Mar 20, 2026 - 10:44 AM
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தார். நேற்று (19.03.2026) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், மலையகச் சமூகத்தின் கல்வியில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தந்தையும் தனயனும் 9ம் திகதி வரை கம்பி எண்ணுகின்றார்கள்

  • Jan 5, 2026 - 07:00 PM
  • 0 Comments

நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று (ஜனவரி 5) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கிணங்க வாக்குமூலம் அளிக்க நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகியிருந்தபோது, முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் அப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான பாரவூர்தியை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு […]

இந்தியா உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்

  • Jan 4, 2026 - 07:57 PM
  • 0 Comments

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர த்விவேதி, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜனவரி 5 முதல் 8 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார். இந்திய பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பின்படி, இந்த விஜயம் நட்பான நாடுகளுடன் பாதுகாப்பு உறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்துகிறது. விஜயத்தின் முதல் கட்டமாக, ஜெனரல் உபேந்திர த்விவேதி ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தினங்களில் ஐக்கிய […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp