உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பலகோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இருவர் கைது..!

  • Mar 26, 2026 - 11:02 AM
  • 0 Comments

10கோடி ரூபாவிற்கும் அதிக சந்தைப் பெறுமதியுடைய “குஷ்” போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு இலங்கை பயணிகள், விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (26.03.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘பசுமை வழி’ ஊடாக இந்தப் போதைப்பொருளை வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே இவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்கள் கொண்டு வந்த 4 பயணப் பொதிகளில் சூட்சுமமாக அமைக்கப்பட்டிருந்த 12 ​பெக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 10 கிலோ […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது..!

  • Mar 26, 2026 - 10:23 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 57 போதை மாத்திரைகளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரை பாவனை அதிகமாக காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , பொலிஸார் மேற்கொண்ட வ விசேட நடவடிக்கையின் போதே , ஐந்து இளைஞர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் , அவர்களிடம் இருந்து 57 போதை மாத்திரைகளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை..!

  • Mar 26, 2026 - 10:19 AM
  • 0 Comments

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தெஹ்ரானுக்கு எண்ணம் இல்லை என்றும், ஈரான் தொடர்ந்து போரிடும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மீண்டும் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு, எதிர்ப்பைத் தொடர்வதே எங்கள் கொள்கை என அராக்சி அரசு தொலைக்காட்சியில் கூறினார். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மேலும் எங்கள் நிலைப்பாடு முற்றிலும் கொள்கை ரீதியானது என்று நான் நம்புகிறேன். இப்போது பேச்சுவார்த்தை பற்றிப் பேசுவது தோல்வியை ஒப்புக்கொள்வதாகும் என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்க […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை..!

  • Mar 26, 2026 - 09:48 AM
  • 0 Comments

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றுடன் (25.03.2026) ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.39 அமெரிக்க டொலர்களாகச் சிறிதளவு உயர்ந்துள்ளதுடன், இது 1% அதிகரிப்பு என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.3 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.10% உயர்வாகும். அதேவேளை, மர்பன் (Murban) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.4 டொலர்களாகக் காணப்படுகிறது. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறியது..!

  • Mar 26, 2026 - 09:37 AM
  • 0 Comments

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, சந்தையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சந்தையில் நுகர்வோர் அநீதிக்குள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சில வர்த்தகர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மறைத்து வைப்பதன் மூலம் சந்தையில் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கவும், பொருட்களின் விலைகளை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 26, 2026 - 09:22 AM
  • 0 Comments

26.03.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கிளிவெட்டி கோபாலபுரம் முன்பள்ளி புனரமைப்புச் செய்து திறந்து வைக்கப்பட்டது..!

  • Mar 25, 2026 - 12:51 PM
  • 0 Comments

புனரமைப்பு செய்யப்பட்ட திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட கிளிவெட்டி கோபாலபுரம் கோகுலம் முன்பள்ளி இன்றைய தினம்(25.03.2026) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் க.இன்பராசா கலந்து கொண்டதுடன், பாலர்பாடசாலை கல்விப் பணியகத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.பிரதீப், முன்பள்ளி வளவாளர் பி.எம்.எம்.றவுப், கிளிவெட்டி மகா வித்தியாலய அதிபர் ப.கோணேஸ்வரராசா, பொதுச்சுகாதாரப் பரிசோதகர், சுகாதார மாது, முன்பள்ளி ஆசிரியர்கள், பொதுச் சங்கங்களின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு..!

  • Mar 25, 2026 - 11:59 AM
  • 0 Comments

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் நாளை (26.04.2026) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது. இந்த நிதியானது பயனாளிகளின் வங்கி கணக்குகளில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கு நடவடிக்கை..!

  • Mar 25, 2026 - 11:38 AM
  • 0 Comments

சட்டச் சிக்கல்களை நீக்க நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (24.03.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஒப்பந்த காறரின் பொறுப்பற்ற செயலால் யாழில் 570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்..!

  • Mar 25, 2026 - 11:31 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 500 மீற்றர் வீதியினை புனரமைக்க 76 நாட்களுக்கு மேல் சென்றதாகவும் , ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் , அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பிலும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராசா தலைமையில் நடைபெற்றது. அதன் போதே பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp