திருகோணமலை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒதுங்கியது
குறித்த சடலம் நீர்கொழும்பு தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 86 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த கடற்கரையின் ஓரமாக கைப் பையும் ஆடைகளுடன் கூடிய பயணப்பையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவர் திருமணமாகாதவர் எனவும் தெரிய வருகின்றது. குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.









