உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்ட ஆண் குழந்தை மரணம்

  • Mar 30, 2025 - 09:55 PM
  • 0 Comments

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை கடந்த (28.03) அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 26ஆம் திகதி, குழந்தைக்கு 2 மாதங்களில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 27ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 28ஆம் திகதி இரவு உயிரிழந்தது. […]

உலகம் வணிகம்

உலகின் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை எலான் மஸ்க் அவரே அவருக்கு விற்றுள்ளார்

  • Mar 29, 2025 - 05:02 PM
  • 0 Comments

உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். டிவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்துள்ளார். அதாவது எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான ஓ யுஐ நிறுவனத்துக்கு […]

உள்ளூர் செய்திகள்

முல்லைத்தீவு கிராம சேவையாளர் ஹரோயின் போதைப்பொருளுடன் கைது

  • Mar 29, 2025 - 04:00 PM
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில் 2 கிராம் ஹரோயின் வைத்திருந்த குற்றசாட்டில் சந்தேக நபரான முன்னாள் கிராம சேவையாளர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியை சேர்ந்த 38 வயதான சந்தேக நபர் கிராம சேவையாளராக இருக்கும் போது, கடந்த சில மாதங்களுக்கு முன் போதைப்பொருளுக்கு அடிமையான குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது  

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் ஸ்தலத்தில் பலி மற்றொரு இளைஞன் படுகாயம்

  • Mar 29, 2025 - 03:47 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாமென யாழ். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

  • Mar 29, 2025 - 03:36 PM
  • 0 Comments

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவானது அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது. எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அனுராதபுரம் பெண் வைத்தியரை வல்லுறவுக்கொண்ட சந்தேகநபரை வைத்தியர் இன்று அடையாளம் காட்டினார்

  • Mar 28, 2025 - 04:16 PM
  • 0 Comments

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த 10 திகதி (10-03) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் அடையாள அணிவகுப்பின் போது பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். 34 வயதுடைய சந்தேக நபர் அடையாள அணிவகுப்புக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரால் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரை அடையாளம் காட்டுவதற்காக, பாலியல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடக்கு மக்கள் ஜேவிபிக்கு ஆணை வழங்கியுள்ளனர் என கொக்கரிக்கும் அரசுக்கு உள்ளுராட்சி தேர்தலில் பதில் சொல்ல வேண்டும்- சுமந்திரன்

  • Mar 28, 2025 - 11:20 AM
  • 0 Comments

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்றபோது கவனமாக உபயோகிக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (27-3) இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் […]

உள்ளூர் செய்திகள்

யாழப்பாணத்தில் 5ம் ஆண்டு மாணவியை தடியால் சின்னதாய் ஒரு தட்டு தட்டிய ஆசிரியர் கைது

  • Mar 28, 2025 - 11:13 AM
  • 0 Comments

பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தரம் – 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலையில் , ஆசிரியரால் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. பரீட்சையின் பின்னர், வினாத்தாளை மாணவர்களிடையே பரிமாறி , அதனை மாணவர்களையே திருத்துமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். அதனை […]

உள்ளூர் செய்திகள்

சமூக ஊடகங்களின் பாவனையால் பிள்ளைகள் மன உளைச்சலுக்குள்ளாகின்றார்கள் – சமூக வைத்திய நிபுணர் சிரந்திகா விதான

  • Mar 28, 2025 - 10:47 AM
  • 0 Comments

தொழில்நுட்ப சாதனங்களின் பாவனை அதிகரிப்பால் பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு இடையிலான தொடர்பு குறைவடைந்துள்ளது. இளம் பிள்ளைகள் இதனால் மனம் மற்றும் உடல் ரீதியாகபல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். அந்தவகையில் சமூகத்தில் உள்ள 18 சதவீதமானோர் கடுமையான மன உளைச்சலால் அவதிப்படுவதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் அண்மையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,15 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளிலிருந்து 2வது நீதவானும் விலகல்

  • Mar 27, 2025 - 12:44 PM
  • 0 Comments

கொழும்பு – கோட்டையில் உள்ள கிரிஸ் கட்டிடம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளில் இருந்து விலகுவதாக கொழும்பு மேலதிக நீதவான் சுஜீவ நிஸங்க இன்று அறிவித்துள்ளார். குpரிஸ் கட்டிடம் தொடர்பான வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுவதாக கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல திலகரத்ன திறந்த நீதிமன்றத்துக்கு இன்றைய தினம் காலை அறிவித்திருந்தார். இந்நிலையில், கிரிஸ் கட்டிடம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளில் ஈடுபட்டிருந்த இரண்டாவது நீதவானான […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp