சீனாவுக்கு ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு
பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங்க்கும் இடையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (18) சந்திப்பொன்று நடைபெற்றது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தி, புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் கின் பொயோங் தெரிவித்தார். அதேபோல் நாட்டின் […]









