இலங்கையிலிருந்து 2,000 வைத்தியர்கள் வெளியேற்றம்,; 5,000 வைத்தியர்கள் வெளியேற தயாராகின்றார்கள்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவைகளிலிருந்து விலகிக்கொண்டதாகவும் சுமார் 5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் மருந்து விநியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பாரிய சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. சங்கத்தின் செய்தித் தொடர்பாளரான வைத்தியர் சமில் விஜேசிறி தெரிவிக்கையில், சேவையிலிருந்து தங்களை விலக்கிக்கொண்ட வைத்தியர்கள் வெளிநாடுகளில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான தகைமைகளை முன்னரே பெற்றுக்கொண்டுள்ளனர். வெளிநாட்டு மருத்துவ சேவைகள் தொடர்பான பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர். […]









