e0aeaee0aebfe0aea9e0af8de0ae9ae0aebee0aeb0 e0ae9ae0aeaae0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0ae85e0ae9ae0aeaee0aea8e0af8de0aea4e0aeaae0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள்

மின்சார சபையின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம்

  • Nov 23, 2024 - 12:48 AM
  • 0 Comments

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணிநேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மின் துண்டிக்கப்படுவதாக பிரதேசவாழ் மக்கள் கவலை வெளியிட்டள்ளனர் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உட்பட கிராம மக்கள் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் தெரிவித்தனர். மின்சார சபையின் இச்செயற்பாட்டினால் […]

e0ae85e0ae9fe0af81e0aea4e0af8de0aea4 e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae85e0aeaee0aeb0e0af8de0aeb5e0af81 | Pathivu News செய்திகள்

அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் 3ம் திகதிக்கு ஒத்திவைப்பு

  • Nov 21, 2024 - 12:44 PM
  • 0 Comments

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை நிறைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தை அடுத்த அமர்வுக்காக டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 வரை ஜனாதிபதி ஒத்திவைத்தார்.

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0aeaee0aebfe0aea9e0af8de0ae9ae0aebee0aeb0 e0ae95e0ae9fe0af8de0ae9fe0aea3 | Pathivu News செய்திகள்

இலங்கையின் மின்சார கட்டணத்தை சர்வதேச நாணய நிதியமே தீர்மானிக்கும்?

  • Nov 21, 2024 - 11:15 AM
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபையின் இந்த கலந்துரையாடல் இன்று (21) காலை நடைபெறுகின்றது மின் கட்டண திருத்தம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், அவர்களின் யோசனைக்கு அமைவாக மின் கட்டண திருத்தம் தொடர்பிலான தீர்மானம் எட்டப்படும் என அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்

e0aeaee0aea4e0af8de0aea4e0aebfe0aeaf e0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0ae86e0aeb3e0af81e0aea8e0aeb0e0af88 e0aea4e0af86e0aea9e0af8d | Pathivu News செய்திகள்

மத்திய மாகாண ஆளுநரை தென்கொரிய தூதுவர் சந்தித்துள்ளார்

  • Nov 21, 2024 - 10:54 AM
  • 0 Comments

மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ் அபேகோனும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது. இரு நாட்டினதும் நட்புறவு, கல்வி கலாச்சார, சமய, விஞ்ஞான தொழில் நுட்பத்துறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன், இலங்கையில் தென்கொரியா செய்துள்ள முதலீடுகள் தொடர்பாகவும்,கொரியாவில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்பு தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

e0aeaae0aebfe0aeb3e0af8de0aeb3e0af88e0aeafe0aebee0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae9ae0aebf e0ae90 e0ae9fe0aebf e0ae85e0aeb4 | Pathivu News செய்திகள்

பிள்ளையானுக்கு சி.ஐ.டி. அழைப்பு நாளை ஆஜராக வேண்டும்

  • Nov 19, 2024 - 09:42 PM
  • 0 Comments

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை நாளை வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு சிஐடியினர் உத்தரவிட்டுள்ளனர். சனல் 4 இன் காணொளியில் பிள்ளையானின் முன்னாள் செயலாளர் வெளியிட்ட பெயரில் பிள்ளையானின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பில் வாக்குமூலத்தை பெறுவதற்காகவே சிஐடியினர் அவரை அழைப்பு விடுத்துள்ளனர்

e0ae9fe0ae95e0af8de0aeb3e0aeb8e0af8d e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aea9e0aeb0e0af8d e0ae87e0aeb0e0af81e0aea8e0af8de0aea4 e0ae85 | Pathivu News செய்திகள்

டக்ளஸ் முன்னனர் இருந்த அமைச்சு இராமலிங்கம் சந்திரசேகர் வசமானது

  • Nov 18, 2024 - 11:18 AM
  • 0 Comments

கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை பதவிப்பிரமாணம் நடைபெற்றது.

19 e0aeaae0af8be0ae9fe0aebf e0aeb0e0af82e0aeaae0aebe e0aeaae0af86e0aeb1e0af81e0aeaee0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aeaae0af8be0aea4 | Pathivu News செய்திகள்

19 போடி ரூபா பெறுமதியாக போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு யுவதி கைது

  • Nov 15, 2024 - 04:32 PM
  • 0 Comments

19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார் 27 வயதுடைய தாய்லாந்து பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று தினம் இரவு 11.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். சந்தேக நபரான தாய்லாந்து பெண்ணை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு […]

e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8de0aea4e0af8d e0aea4e0af87e0ae9ae0aebfe0aeafe0aeaee0af8d e0ae8ee0aea9e0af81e0aeaee0af8d e0ae95e0af8b | Pathivu News உள்ளூர் செய்திகள்

தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது- வி.எஸ்.சிவகரன்

  • Nov 12, 2024 - 02:10 AM
  • 0 Comments

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது எனவே அனைவரும் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் நேற்று திங்கட்கிழமை (11) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மாற்றம் ஊழலற்ற புதிய அரசியல் கலாசாரத்தை கட்டமைப்போம் இலங்கையராக ஒன்றிணைவோம் என கவர்ச்சிகரமாக பன்மைத்துவ […]

e0ae8ee0aeaee0af8d e0ae8f e0ae9ae0af81e0aeaee0aea8e0af8de0aea4e0aebfe0aeb0e0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebf | Pathivu News செய்திகள்

எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையினர் போர் கொடி.

  • Nov 8, 2024 - 04:26 PM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு பல்வேறு காரணங்களால் தேர்தலில் போட்டியிட கட்சி அனுமதிக்கவில்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து ஏற்புடையதல்லவென தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையினர் தெரிவித்துள்ளனர் ஆகவே சுமந்திரன் அவரது கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை செயலாளர் சூசையப்பு ஜஸ்ரின் துரம் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் அலுவலகத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு […]

e0ae8ae0aeb4e0aeb2e0af8d e0aeaae0af87e0aeb0e0af8de0aeb5e0aeb4e0aebfe0aeafe0aebee0aea9 e0ae92e0aeb0e0af81e0aeb5e0aeb0e0af88 e0aeaa | Pathivu News உள்ளூர்

ஊழல் பேர்வழியான ஒருவரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அநுர அரசு நியமித்துள்ளது- ஈபிடிபி.

  • Nov 5, 2024 - 09:47 PM
  • 0 Comments

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பல்வேறு ஊழல் மோசடிளில் ஈடுபட்ட ஒருவரை நியமித்தமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வாறு ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஊழலை ஒழித்து மாற்றத்தை கொண்டுவருவதாக […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp