e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0aeb5e0af88e0aeb0e0aeb8e0af8d e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95 | Pathivu News செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் இலங்கைக்கு எச்சரிக்கை

  • Jan 3, 2025 - 03:34 PM
  • 0 Comments

சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னர் மேலதிக தகவல்களை பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

e0ae87e0ae99e0af8de0ae95e0aebfe0aeb2e0aebee0aea8e0af8de0aea4e0af81 e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb2 e0aeaee0af81e0aeb1e0af8de0aeaae0ae9f | Pathivu News செய்திகள்

இங்கிலாந்து செல்ல முற்பட்ட தமிழர் கட்டுநாயக்காவில்கைது கைது!

  • Jan 1, 2025 - 12:19 PM
  • 0 Comments

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நேபாளம் ஊடாக இங்கிலாந்து செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று ( டிசம்பர் 31) கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் முதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 39 வயதுடைய மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சந்தேக நபர் நேபாளத்திற்குச் செல்லும் இந்திய விமான சேவையில் பயணிப்பதற்காக நேற்று விமான நிலையத்திற்கு வந்திருந்தார், ஆனால் குடிவரவு கருமபீடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். குடிவரவு கருமபீட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை […]

e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0ae86e0aea3e0aeb4e0ae95e0aea9e0af8d e0aeaae0af8be0ae9fe0af8d | Pathivu News செய்திகள்

வடக்கு மாகாண ஆணழகன் போட்டி

  • Dec 31, 2024 - 10:46 AM
  • 0 Comments

யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன் (டீழனல டிரடைனiபெ) மற்றும் பெண் உடலமைப்பு அழகி ( றுழஅநn phலளஙைரந) ஆகிய போட்டிகள் யாழ்ப்பாணத்தில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றன. வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனுக்காக இடம்பெற்ற போட்டியில், வவுனியா னுகுஊ உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சத்தியசீலன் பிரதீப் முதலாம் இடத்தைப் பெற்று வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனாக தெரிவு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில், […]

e0ae9ae0aebfe0aeb1e0af88e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb2e0af88e0ae95e0aeb3e0aebfe0aeb2e0af8d e0aeaae0af8be0aea4e0af88e0aeaae0af8de0aeaa | Pathivu News செய்திகள்

சிறைச்சாலைகளில் போதைப்பொருட்களுக்கு இடமளிக்க வேண்டாம் ஜனாதிபதி பணிப்புரை!

  • Dec 30, 2024 - 10:03 PM
  • 0 Comments

கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கினார். அத்துடன் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நபர்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்த ஜனாதிபதி, அதற்காக இணையவழி (ஒன்லைன்) முறையைப் பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார். ஒன்லைன் முறையின் ஊடாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கண்டறிந்து அது தொடர்பான […]

e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0af81 e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0ae95e0aebfe0aeb0e0aebe | Pathivu News செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட கிராம அலுவலர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

  • Dec 30, 2024 - 09:38 PM
  • 0 Comments

சில நாட்களுக்கு முன்னர் கோறைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதி கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை அச்சுறுத்தலின்றி மேற்கொள்ள வேண்டியும், தாக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

e0aeb5e0aeb2e0aebfe0aea8e0af8de0aea4e0af81 e0ae95e0aebee0aea3e0aebee0aeaee0aeb2e0af8d e0ae86e0ae95e0af8de0ae95e0aeaae0af8de0aeaae0ae9f | Pathivu News செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடகில் போராட்டம்

  • Dec 30, 2024 - 08:01 PM
  • 0 Comments

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும் ஏந்தியவாறு ‘காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?’, ‘ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா ’15 வருடமாக போராடும் எமக்கு விடிவு இல்லையா’ என பல்வேறு கோஷங்களைஎழுப்பியவாறு வவுனியாவில் போராட்டம் முன்னெடுக்கப்ட்டது இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா அமர்வில் எமக்கான நீதியை பெற்றுத் தர ஐ.நா வலியுறுத்த வேண்டும். 2025ஆம் ஆண்டிலாவது […]

e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 21 | Pathivu News உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)27.12.2024

  • Dec 28, 2024 - 12:27 AM
  • 0 Comments

இந்திய மீனவர்களுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை – அமைச்சர் சந்திரசேகரன்! வெடுக்குநாறி மலையில் ஆதிசிவனை வழிபட வழிசெய்யுங்கள் – ரவிகரன் காணிகளை படையினர் ஆக்கிரமித்திருந்தால் அறியத்தருமாறு காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் கோரிக்கை யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் பாவனை அதிகரித்துள்ளதா? இந்தியாவை அமைதிகாக்குமாறு கஜேந்திரகுமார் எம்பி கோரிக்கை https://youtu.be/x815qcnAbH4

e0ae9ae0aebfe0aeb5e0aebfe0aeb2e0af8d e0aea8e0ae9fe0aeb5e0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae86e0aeafe0af81 | Pathivu News செய்திகள்

சிவில் நடவடிக்கையில் ஆயுதப்படையினரை ஈடுபடுத்தும் ஜனாதிபதி

  • Dec 27, 2024 - 02:13 PM
  • 0 Comments

நாடு முழுவதும் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

e0ae86e0aeb4e0aebf e0aeaae0af87e0aeb0e0aeb2e0af88e0aeafe0aebfe0aea9e0af8d 20e0ae86e0aeaee0af8d e0ae86e0aea3e0af8de0ae9fe0af81 e0aea8 | Pathivu News உள்ளூர் செய்திகள்

ஆழி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு!

  • Dec 27, 2024 - 02:18 AM
  • 0 Comments

இலங்கை உட்பட பல நாடுகளில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்த சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து  20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த பெரும் சோகத்தில் உயிரிழந்த நாட்டு மக்கள் இன்று நாடளாவிய ரீதியில் நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டனர் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட ஆழிப்பேரலையால், பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் உயிர்கள் காவு வாங்கப்பட்டன. காலை 6.58 […]

e0ae95e0ae9fe0af8de0ae9fe0aebee0aeaf e0aea4e0af87e0aeb0e0af8de0ae9ae0af8de0ae9ae0aebf e0aeaee0af81e0aeb1e0af88e0aeafe0af88 e0ae87 | Pathivu News இந்தியா செய்திகள்

கட்டாய தேர்ச்சி முறையை இரத்து செய்த மத்திய அரசு!

  • Dec 24, 2024 - 02:42 AM
  • 0 Comments

கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை தோல்வி அடைய செய்ய கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இந்நிலையில், மத்திய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் கூறியதாவது, 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுகிறது. தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதிலும், மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp