உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில்.1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள்..!

  • Apr 2, 2026 - 11:51 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது என கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வர்த்தகத் துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு மாணவன்..!

  • Apr 1, 2026 - 11:37 AM
  • 0 Comments

வெளியாகிய 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சுபைதீன் முஹமட் பர்தான் அகில இலங்கை ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் வர்த்தகத் துறையில் முதலிடம் பெற்றுள்ளது அம்மாணவனுக்கும் இந்த வெற்றியில் பங்கெடுத்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. பரீட்சை திணைக்களத்தின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அகில இலங்கை ரீதியில் கிளிநொச்சி மாணவன் முதலிடம்..!

  • Apr 1, 2026 - 10:21 AM
  • 0 Comments

உயர்தரப் பரீட்சை பெறுபேறுளின் படி பௌதீக விஞ்ஞான பாடத்தில் (கணிதப் பிரிவு) தமிழ் மொழி மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார். தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவனே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு(31.03.2026) வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 81 ஆயிரத்து 810 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்த […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 1, 2026 - 09:43 AM
  • 0 Comments

01.04.2026 இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை தொடரும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பல இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல்..!

  • Mar 31, 2026 - 11:44 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் நாவிதன்வெளி பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30.03.2026) மாலை நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் தவிசாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள் தேவைகள் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன இறுதியில் விசேட செய்தியாளர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதியை விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை..!

  • Mar 31, 2026 - 09:46 AM
  • 0 Comments

குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதியை சட்டமா அதிபர் ஆலோசனைப்படி விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள, அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தனி ஜெயலக்ஷி டி சில்வாவை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது கடுமையான ஆட்சேபனைகளை முன்வைத்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலையீடு குறித்த முதற்கட்ட ஆட்சேபனை வழக்குத் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 31, 2026 - 09:25 AM
  • 0 Comments

31.03.2026 நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கொலை விவகாரம் ; கடத்தல் கும்பலின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த முக்கிய ஆதாரம்..! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

  • Mar 27, 2026 - 11:05 AM
  • 0 Comments

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, கொள்ளைகளுக்காக மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி, கொலை செய்யும் குழு தொடர்பில் மற்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பெண்களின் தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பின்னர், அவர்களை கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த குழுவுடன்; தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மயக்கத்துக்கு பாவிக்கும் தெளி கருவியுடன் மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பொலிசார் நினைத்தவுடன் கைது செய்ய முடியாது..!

  • Mar 26, 2026 - 09:27 AM
  • 0 Comments

பொலிஸ்மா அதிபரின் அதிரடி உத்தரவு சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார். அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டப்பிரிவுகளின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை மூலம் போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு..!

  • Mar 25, 2026 - 11:59 AM
  • 0 Comments

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் நாளை (26.04.2026) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது. இந்த நிதியானது பயனாளிகளின் வங்கி கணக்குகளில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp