செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தணைகளுக்கு அடிபணிந்தார்- ஜனாதிபதி அநுர

  • Nov 21, 2024 - 01:56 PM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

செய்திகள்

டக்ளஸ் முன்னனர் இருந்த அமைச்சு இராமலிங்கம் சந்திரசேகர் வசமானது

  • Nov 18, 2024 - 11:18 AM
  • 0 Comments

கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை பதவிப்பிரமாணம் நடைபெற்றது.

செய்திகள்

யாழில் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

  • Nov 13, 2024 - 02:32 PM
  • 0 Comments

யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து யாழ் மாவட்டத்திற்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. முதலாவது பேருந்து இன்று புதன்கிழமை (13) காலை 8.30 மணிக்கு வாக்குப் பெட்டியை ஏற்றியவாறு புறப்பட்டது. இதன்போது கண்காணிப்பில் யாழ். தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.  

செய்திகள்

முன்னாள் எம்பி ஆனந்தனையும் செல்வத்தையும் பற்றிய எல்லா உண்மைகளை சொல்லவேண்டி வரும். எமில்காந்தன்.

  • Nov 4, 2024 - 02:36 PM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம்அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது முழு வரலாற்றையும் வெளியே சொல்லவேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டாமென வன்னி மாவட்ட சுயேட்சை வேட்பாளரான எமில்காந்தன் தெரிவித்துள்ளார் வவுனியாவில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வன்னி தேர்தல் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது ஆதரவாளர்கள் தமது சின்னமான கோடாலிச் சின்னத்தை தொடர்ச்சியாக விமர்சிக்கிறார்கள் என […]

செய்திகள்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் முதியவரின் சடலம் மீட்பு.

  • Oct 27, 2024 - 05:15 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த வயோதிபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 79 வயதுடைய திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் நேற்று (26) டெங்கு ஒழிப்பு கள விஜயத்தின் போதே முதியவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார், அதிகாரிகள் முதியவரின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில் முதியவர் இறந்து போயுள்ளார். உடனடியாக அதிகாரிகள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ […]

செய்திகள்

இணையவழி மோசடிகள் குறித்து மக்கள் விளிப்பாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை.

  • Oct 27, 2024 - 04:54 PM
  • 0 Comments

இணையம் ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள்; அதிகரித்து வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையம் ஊடாக மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த வெளிநாட்டினரும் நம் நாட்டவர்களும் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை தவிரவும் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர வயது மற்றும் முதியவர்களுடன் போலியான காதல் உறவுகளை உருவாக்கியும் பணமோசடி நடைப்பெற்று வருகின்றது. அத்துடன் சமூகத்தில் பிரபலமானவர்கள் போல் பாசாங்கு காட்டி பணம் பெறும் செயற்பாடுகளும் இந்த நாட்களில் […]

செய்திகள்

மணியின் மான் யாழ் நகரில்; வாக்கு வேட்டை.

  • Oct 26, 2024 - 04:45 PM
  • 0 Comments

  தமிழ் மக்கள் கூட்டணியினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (26) யாழ் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. யாழ் நகர் பகுதியில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்கு சேகரிக்கும் நோக்கில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பொதுமக்களிடம் வாக்களிக்குமாறு கேட்டனர். தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மாநகரசபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், மிதிலைச்செல்வி பத்மநாதன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விக்னேஸ்வரன் […]

உலகம்

ரொறன்ரோவில் தீ விபத்து குழந்தை பலி.

  • Oct 26, 2024 - 01:33 PM
  • 0 Comments

  கனடாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் சிசுவொன்று கொல்லப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் எக்லின்டன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் இ சிசுவொன்று உயிரிழந்த அதே வேளை பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். காயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்படும் போது ஆறு பேர் வீடடில் இருந்தனர் எனவும், தீ விபத்து காரணமாக சிலர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உலகம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கனடாவில் சுட்டுக்கொலை.

  • Oct 22, 2024 - 05:16 PM
  • 0 Comments

ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒன்ராறியோ மாநிலம், மார்க்கம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்றையதினம் (20-10-2024) அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்காக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் பணிக்கமர்த்தப்படவுள்ளனர் -தேர்தல்கள் ஆணைக்குழு!

  • Oct 22, 2024 - 02:39 PM
  • 0 Comments

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளது. குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கு நவம்பர் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை பெப்ரல் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp