செய்திகள்

மணியின் மான் யாழ் நகரில்; வாக்கு வேட்டை.

 

தமிழ் மக்கள் கூட்டணியினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (26) யாழ் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

யாழ் நகர் பகுதியில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்கு சேகரிக்கும் நோக்கில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பொதுமக்களிடம் வாக்களிக்குமாறு கேட்டனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மாநகரசபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், மிதிலைச்செல்வி பத்மநாதன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்