உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சஞ்சீவ கொலைக்குப் பழிதீர்க்கும் செயலே மினுவாங்கொடை துப்பாக்கிச்சூடு

  • Feb 27, 2025 - 09:33 AM
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மீதே நேற்று (26-2-2025) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மினுவங்கொடை – பத்தடுவன பகுதியில், கெஹெல்பத்தர பத்மே என்ற குற்றக் கும்பல் உறுப்பினரின் பாடசாலை நண்பர் என்று நம்பப்படும் 36 வயது நபர் மீது இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நடைப்பெற்றுள்ளது

  • Feb 26, 2025 - 02:39 PM
  • 0 Comments

இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று செவ்வாய்கிழமை (25-02-2025) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், இலங்கைக்கான அவுஸ்திரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் மேத்யூ லார்ட் ஆகியோர் பங்கேற்றனர். எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நாட்டில் நிலவும் பல்வேறு சமூக-பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இங்கு நீண்டநேரம் கருத்துப் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாமல்

  • Feb 26, 2025 - 10:23 AM
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள்

சிங்கள மாவட்டங்களையும் தமிழ் மாவட்டங்களையும் வரவு – செலவுத் திட்டத்தில் அரசு வேறுபடுத்தியிருக்கின்றது- – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • Feb 26, 2025 - 06:13 AM
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இருப்பினும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான தீர்வுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. எம் மக்களுக்கு முரண்பாடற்ற தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு எந்த தெரிவுகளும் தமக்கு கிடையாது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழர் பிரதேசங்களில் ஆக்கிரமிப்புக்கள் இன்றும் தொடர்கின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கடந்த ஜனவரி ஒன்றிலிருந்து 17 துப்பாக்கிச் சூடு 49 பேர் கைது!

  • Feb 25, 2025 - 02:22 PM
  • 0 Comments

அண்மைய காலங்களில் நாட்டில் இடம்பெற்ற அனைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடைய பெரும்பாலானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். காவல்துறை ஊடக பிரிவில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையில் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 11 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவை எனவும், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழிலிருந்து மாடுகள் கடத்த வடிவமைக்கப்பட்ட பாரவூர்தியுடன் ஒருவர்

  • Feb 25, 2025 - 01:21 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி காவல்துறையினர் நேற்று (24-02-2025) இரவு கைது செய்துள்ளதுடன் , கடத்தி செல்லப்பட்ட 18 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்திய பரவூர்தியையும் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த பாரவூர்தியை வழிமறித்து சோதனையிட்டனர். அதன் போது , பாரவூர்திக்குள் 18 மாடுகள் , மிக நெருக்கமாக அடைக்கப்பட்டு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பெண்ணை தேடியலையும் இலங்கை பொலிஸார், உதவினால் 10 இலட்சமாம். யாருதவுவர்?

  • Feb 25, 2025 - 01:09 PM
  • 0 Comments

புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஜேவிபியின் ஆயூதக்கிளர்ச்சியின் போது செய்யப்பட்ட கொலைகளால் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்

  • Feb 25, 2025 - 01:03 PM
  • 0 Comments

1989ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சி தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர திசநாயக்கவிற்கும் எதிர்கட்சி உறுப்பினர் ரோகிணி கவிரட்ணவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சரான தனது தந்தை 1989ம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது 8 பேரை கொலை செய்தார் என தேசியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார் என எதிர்கட்சி உறுப்பினர் ரோகிணி கவிரட்ண தெரிவித்ததை தொடர்ந்து இந்த வாக்குவாதம் இடம்பெற்றது. எனது தந்தை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்படும்

  • Feb 25, 2025 - 11:06 AM
  • 0 Comments

விண்ணப்பிக்கப்ட்டுள்ள அனைத்து கடவுச்சீட்டுகளும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்று கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்றத்தின் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தில் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரான ஆனந்த விஜேபால தெரிவித்தார். 24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளமையை அமைச்சர் உறுதிப்படுத்தியதுடன், தேவையான அச்சிடும் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டவுடன் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் நிறுவப்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பிஸ்ட்டல் கொடுத்துதவிய பெண் சந்தேகநபரின் தாயார், சகோதரன் கைது!

  • Feb 25, 2025 - 09:23 AM
  • 0 Comments

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கணேமுல்ல சஞ்சீவ என்பவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவினால் நேற்று திங்கட்கிழமை (24) கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிந்து திவங்க வீரசிங்க என்ற 23 வயதுடைய இளைஞனும், அதே பகுதியைச் சேர்ந்த சேசத்புர தேவகே சமந்தி என்ற 48 வயதுடைய பெண்ணும் கொலை தொடர்பான […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp