உள்ளூர் செய்திகள்

இலங்கையில் வேருன்றும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கவேண்டும் – ஞானசார தேரர்

  • Apr 22, 2025 - 03:31 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு உண்மையான நீதியை வழங்கவேண்டும் என்றால் நாட்டில் புற்றுநோய் போன்று பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை முற்றாக தோற்கடிக்கவேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் அவ்வறான திட்டம் எதனையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக பல மேடைகளில் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும்,இதுவரை அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதத்துடன் 1990 முதல் தொடர்புகளை பேணிவந்த குழுக்கள் […]

உள்ளூர் செய்திகள்

மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஈஸ்ட்டர் தாக்குதலுக்கு நீதி கோரிய போராட்டத்தில் குதித்தார்

  • Apr 21, 2025 - 06:04 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்கள் நிறைவடைந்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சந்தியில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியிருந்தனர். இவர்கள் கடந்த பல மாதங்களாக ஒவ்வொரு 21ஆம் திகதியன்றும் இந்த சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தலில் சைக்கிளுக்கு ஆதரவு – அர்ச்சுனா எம்.பி

  • Apr 20, 2025 - 09:32 PM
  • 0 Comments

உள்ளூராட்சி சபைதேர்தலில் பட்டினமும் சூழலும் பிரதேச சபை மற்றும் திருகோணமலை நகரசபைக்கும் போட்டியிடும் இரு சுயேட்சைக்குழுக்களை தமது கட்சியுடன் இணைப்பது தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். {{CODE2}} திருகோணமலையில் இன்று குறித்த இரு சுயேட்சைக்குழுக்களையும் சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமது கட்சியானது வட கிழக்கில் இணைந்த கட்சியாக விஸ்தரிக்கப்பட்டு அதனை பதிவு செய்தல் தொடர்பாக வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்டுள்ளார். இம்முறை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் இந்தியா ஆயுதங்களை களஞ்சியப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?- ஹிருணிகா

  • Apr 20, 2025 - 07:46 AM
  • 0 Comments

இந்தியாவில் அவசர யுத்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். எனவே இதன் உண்மை தன்மை தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கடுவலையில் வெள்ளிக்கிழமை (18-04) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதியான தயான் ஜயதிலக […]

உள்ளூர் செய்திகள்

காதலன் நீரில் மூழ்கி மரணம் காதலி இன்று தற்கொலை யாழில் சம்பவம்

  • Apr 18, 2025 - 12:48 PM
  • 0 Comments

தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயர்மாய்துள்ளார். யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17-04) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிசாரிற்கு கிடைத்த […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியை அகழ்வதற்கு அரசாங்கம் தயாரில்லையென்கிறார் கஜேந்திரகுமார்

  • Apr 15, 2025 - 03:16 PM
  • 0 Comments

யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியே செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டுகிறார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமார் 600க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் யாழ். செம்மணியில் புதைக்கப்பட்டமை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றும்- சிறீதரன் எம்.பி நம்பிக்கை

  • Apr 12, 2025 - 07:29 AM
  • 0 Comments

அரசியற் தளத்தின் அடிப்படை அலகுகளாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுப்பதன் மூலமே, எமது மக்களின் அடிப்படை வாழ்வியலையும், அது சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளையும் கட்டமைக்க முடியும். அத்தகைய சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய உள்ளூராட்சி மன்றங்களை இம்முறையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றுவதற்கான ஆணையை எமது மக்கள் வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில், கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட அக்கராயன் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளரை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்படலாமென ரணில் தெரிவிப்பு

  • Apr 9, 2025 - 01:16 PM
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : அமெரிக்காவின் சமீபத்திய ‘பரஸ்பர’ வரி விதிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் சீனா அதன் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக ஏற்படும் வர்த்தக பதட்டங்கள் தொழிற்சாலை மூடல்கள், பெரிய அளவிலான வேலை இழப்புகள் மற்றும் விரிவடையும் வர்த்தக பற்றாக்குறைகள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

டொனால்ட் ட்ரம்புக்கு அநுரகுமார கடிதம் வரியை நீக்க கோரி

  • Apr 9, 2025 - 07:29 AM
  • 0 Comments

இலங்கையைப் பாதிக்கும் அமெரிக்க வரிக் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் இலங்கையைப் பாதிக்கும் அமெரிக்க வரிக் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என தொழில் அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (8-04) நடைபெற்ற அமர்வின் போது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கஞ்சாவின் ஊசலாட்டம் உச்சம்,யாழ்ப்பாணத்தில் 12 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • Apr 9, 2025 - 06:40 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (8-04) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன. அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp