முக்கிய செய்திகள்

துப்பாக்கி சூட்டிற்கு நானும் இலக்காக்கப்படலாம் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

  • Jan 24, 2025 - 05:16 AM
  • 0 Comments

மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதற்கு பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை என்ற திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. முன்னாள் ஜனாதிபதி இல்லம் தொடர்பான தீர்மானம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை […]

செய்திகள்

மருதானை பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபரான பெண்ணொருவர் தற்கொலை!

  • Jan 22, 2025 - 08:56 PM
  • 0 Comments

நேற்றிரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் இந்தச் சம்பவம் இன்று (22) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

செய்திகள்

நீதிபதி இளஞ்செழியனை அநுர அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது- தீவக சிவில் சமூகம்

  • Jan 22, 2025 - 08:50 PM
  • 0 Comments

மேன்முறையீட்டு நீதிபதிக்கான பதவி உயர்விற்கு அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அதில் கவனம் செலுத்தாது நீதிபதி இளஞ்செழியனுக்கு அநுர அரசு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு மாகண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாடியுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது’ இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் […]

முக்கிய செய்திகள்

டிஜிட்டல் பிளாட்போம் எம்பி. அர்ச்சுனா கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

  • Jan 21, 2025 - 06:30 PM
  • 0 Comments

யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அநுராதபுரம் ரம்பாவ பகுதியில் இன்றைய தினம் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளக்குகளை ஒளிரச் செய்து வாகனத்தை செலுத்தி சென்றுள்ளார். இதன்போது,போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அர்ச்சுனாவின் வாகனத்தை நிறுத்தி அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர். பின்னர், அர்ச்சுனா […]

செய்திகள்

வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் கைது அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டில்

  • Jan 21, 2025 - 04:18 PM
  • 0 Comments

அரச காணிக்கான போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பிரதான குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன

  • Jan 20, 2025 - 03:06 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டூர் – வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச்செய்வது பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் […]

முக்கிய செய்திகள்

மன்னாரில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

  • Jan 20, 2025 - 02:43 PM
  • 0 Comments

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு தொடரூந்து கடவைக்கருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று (20) மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகம் வினோத உலகம்

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா? தெரியாவிட்டால் வாசியுங்கள்

  • Jan 19, 2025 - 10:21 PM
  • 0 Comments

எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களின் புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.. 1.சிங்கப்பூர் – 195 நாடுகளுக்கு விசா தேவையில்லை. 2. ஜப்பான் – 193 நாடுகளுக்கு விசா தேவையில்லை. 3. பின்லாந்து,பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின்- 192 நாடுகளுக்கு விசா தேவையில்லை . 4. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவீடன், நார்வே- 191 நாடுகளுக்கு விசா தேவையில்லை. […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

  • Jan 19, 2025 - 03:37 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்; மழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு நவகரி பிரதேசத்தில் 92 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வாகரை, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, ஏறாவூர் உட்பட பல பிரதேச செயலக பிரிவுகளில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின இதனால் மக்களின் இயல்பு […]

செய்திகள்

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைத்து குற்றவாளிகளை தப்பவிட்ட பொலிஸார்

  • Jan 18, 2025 - 03:33 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (17) பொலிஸார் சுற்றிவளைத்தனர் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டது இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பியோடினர் சந்தேக நபர்களை கலைத்து பிடிக்க முடியாத பொலிஸார் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 14 பெரல் கோடாவை மடடுமே கைப்பற்றியுள்ளனர்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp