கரைக்கு கொண்டு வரப்பட்ட ஆழ்கடலில் பிடிபட்ட படகு..!
போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் தென்மேற்கு திசையில் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த படகில் இருந்த 6 சந்தேகநபர்களுடன் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









