உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல்..!

  • Apr 7, 2026 - 05:20 PM
  • 0 Comments

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல்! யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் இன்றைய தினம் (07.04.2026) பி. ப. 02.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி தாரணி கஜரூபன் ஆகியோரது இணைத் தலைமையில் நடைபெற்றது. இக் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது..!

  • Apr 7, 2026 - 05:14 PM
  • 0 Comments

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, தேசிய அரசு சபையால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், 2021ஆம் ஆண்டில் அரசிற்குச் சொந்தமான நிலமொன்றில் கட்டுமானத் திட்டத்திற்கு அனுமதி வழங்கி, விண்ணப்பதாரருக்குச் சாதகமாகச் செயற்பட்டதன் மூலம் ‘ஊழல்’ செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் […]

செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் யாழ் பாதுகாப்பு படைத்தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பு..!

  • Apr 7, 2026 - 05:08 PM
  • 0 Comments

கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் 35 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். இன்றைய தினம்(07.04.2026) கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபருடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார். இச் சந்திப்பின் போது மாவட்டத்தின் பாதுகாப்பு நிலை, பொதுமக்கள் நலன், அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நல்லூர் மந்திரி மனை அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது..!

  • Apr 7, 2026 - 10:21 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது , அதனை புனரமைப்பது தொடர்பாக நல்லூர் மந்திரிமனையின் நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து இரு வாரங்களுக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பல கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

  • Apr 6, 2026 - 12:34 PM
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (06.04.2026) சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இன்று (06) காலை 06:50 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான AI-277 என்ற […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வத்தளையில் துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து..!

  • Apr 6, 2026 - 10:07 AM
  • 0 Comments

வத்தளை, மாபோல தூவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (06.04.2026) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த 13 அதிகாரிகள் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கும் மஹிந்த கம்பனிக்கு இடையேயும் வேறுபாட்டை காணமுடியாமல் உள்ளது..!

  • Apr 6, 2026 - 10:02 AM
  • 0 Comments

கடந்த. ஜனாதிபத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பன இடம்பெற்ற காலத்தில் தற்போதைய ஆட்சியாளர்களால் பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளமை வேதனையளிக்கும் விடயமாகும். அதில் ஒன்றுதான் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவோம் என்பதாகும். ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றமை பொதுமக்களின் அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும். இவ்வாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் குறிப்பிட்டார். இத் தொழிற்சங்கத்தின் உயர்பீட கூட்டம் நேற்றைய தினம் […]

முக்கிய செய்திகள் உள்ளூர் செய்திகள் புதியவை

இன்று ஆரம்பமாகிறது தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்..!

  • Apr 6, 2026 - 09:51 AM
  • 0 Comments

இன்று (06.03.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் எட்டும் வகையில், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பிக்கு ; நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை..!

  • Apr 3, 2026 - 10:03 AM
  • 0 Comments

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்குவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்துள்ளது. நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக கடந்த 28ஆம் திகதி சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளது..!

  • Apr 2, 2026 - 02:14 PM
  • 0 Comments

கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார இன்று (02) தெரிவித்தார். வெப்பமான வானிலையுடன் நீரின் நுகர்வு அதிகரித்து வருவதாகவும் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை மற்றும் நீர் நுகர்வு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp