உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்நாள் பிரதமர் முன்னாள் ஜனாதிபதியை பார்க்கவில்லை.

  • Aug 26, 2025 - 08:42 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்த்ரீ விக்ரமசிங்க உடன் நேற்று (25-08) அதிகாலை நேரத்தில் சந்தித்ததாக பரவிய செய்திகளை பிரதமரின் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது.

உள்ளூர் செய்திகள்

மட்டு களுவாஞ்சிக்குடியில் ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பியவர்கள் புதைக்கப்பட்ட இடத்தை அகழ நீதிமன்றம் அனுமதி

  • Aug 26, 2025 - 07:00 AM
  • 0 Comments

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம், குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி உள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டி எடுக்க உத்தரவிட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கே இப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் சார்பில் யு.ஆ.ஆ. ரவூப், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவ இடத்தில் […]

உள்ளூர் செய்திகள்

சோமரத்ன ராஜபக்ஸவின் உயிருக்கு ஆபத்தென்கிறார் அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ஸ

  • Aug 6, 2025 - 12:15 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாக, கிருஸாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபகஸ் தெரிவித்துள்ளார். இதனை அவரது மனைவி எஸ்.சி. விஜேவிக்ரம, ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   அக்கடிதத்தில், யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட சித்திரவதைக்கூடங்கள் […]

உள்ளூர் செய்திகள்

காதலியை கழுத்தறுத்து கொன்று விட்டு காதலன் தற்கொலை

  • Jul 23, 2025 - 05:32 PM
  • 0 Comments

இளம் பெண்ணை கொன்று அவரது பெற்றோரை வெட்டி காயப்படுத்திய இளைஞன் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பதியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரங்கல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் அவரது காதலன் என கூறப்படும் இளைஞனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன் பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் தனது காதலி எனப்படும் இளம் பெண்ணொருவரின் வீட்டிற்கு பிரவேசித்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசர் உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தெரிவு

  • Jul 22, 2025 - 05:55 PM
  • 0 Comments

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. தற்போதைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜூலை 27ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார். அவர் ஜூலை 25ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் பிரியாவிடை உரை ஆற்றவுள்ளார். நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினராக செயல்பட்டதுடன், பல […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டடத்தை உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் பார்வையிட்டனர்

  • Jul 22, 2025 - 01:09 PM
  • 0 Comments

மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் கட்டடம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இப்பார்வை இடம்பெற்றது. இதற்கு முன்னதாக, மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பழைய கச்சேரி மற்றும் யாழ்ப்பாணக் கோட்டை ஆகியவற்றை புனரமைப்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு அவசியம் என மாவட்ட செயலர், உலக வங்கி குழுவினரிடம் வலியுறுத்தியிருந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க, உட்கடுமாணம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு இணங்க கடந்த இரண்டு மாதங்களாகவே உலக வங்கி […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுத் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது- மத்திய வங்கி

  • Jul 14, 2025 - 07:45 AM
  • 0 Comments

2025 மே மாதத்தில் இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுத் தொகை 1.507 பில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 179 மில்லியன் டொலர் குறைவாகும். இந்த வீழ்ச்சியானது தனிநபர் வாகன இறக்குமதியில் பெரிதாகக் காணப்படாமல் இருந்த போதிலும், சேவைத் துறையிலுள்ள வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சில வர்த்தகப் பொருட்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக உருவாகியுள்ளது. தனிநபர் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதி மதிப்பு மே மாதத்தில் […]

உள்ளூர் செய்திகள்

அர்சுனா எம்பியின் வாயாலேயே எதிர் கட்சி எம்பிக்களை CID யினர் விசாரித்தனர்- தயாசிறி ஜயசேகர

  • Jul 14, 2025 - 07:12 AM
  • 0 Comments

323 கன்டெய்னர்கள் சுங்கச் சோதனை இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தியதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரிமைச் சிக்கல்களை எழுப்பியதற்கும், சபாநாயகரின் பதில் இதுவரையும் கிடைக்கவில்லையென தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார் இந்த விவகாரம் கடந்த வாரம் ஒரு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளா அதனைத் தொடர்ந்து, சில எதிர்க்கட்சித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊஐனுயால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படினர். இதற்கு எதிர்வினையாக, அவர்களது அழைப்புகள் முற்றிலும் காரணமற்றவை என எதிர்க்கட்சியினர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சி எம்.பி.ரவிகரன் தமிழரசுக் கட்சியின் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்

  • Jun 25, 2025 - 02:06 PM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். அந்த வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார். அதேவேளை ரவிகரன், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் […]

உள்ளூர் செய்திகள்

யாழில் 10 சபைகள், வன்னியில் 4 சபைகளை சங்கு சைக்கிள் கூட்டணி கைப்பற்றும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • Jun 7, 2025 - 06:26 AM
  • 0 Comments

வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்கமுடியும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp