உள்ளூர் செய்திகள்

வெள்ள காடாக காட்சியளிக்கும் வடக்கு, கிழக்கு

  • Nov 26, 2024 - 12:14 AM
  • 0 Comments

குறிப்பாக, வட மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இந்நிலையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடளாவிய ரீதியில் மழை, வெள்ளம் காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மத்திய – தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த […]

செய்திகள்

முன்னாள் எம்பி மார்; 30 உத்தியோகப்பூர்வ வீடுகளை விடேல்லயாம்

  • Nov 24, 2024 - 04:51 PM
  • 0 Comments

புதிய எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டியுள்ளதால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீடுகளை கையளிக்குமாறு அரசு அறிவித்துள்ளது இதுவரை ஏழு எம்.பி.க்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். முன்னாள் எம்.பி.க்கள் குறித்த குடியிருப்புகளை விட்டு வெளியேறாவிட்டால் அந்த குடியிருப்புகளுக்கான நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கொழும்பில் மாதிவெல வீட்டுத் தொகுதி புதிய நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற […]

செய்திகள்

மத்திய மாகாண ஆளுநரை தென்கொரிய தூதுவர் சந்தித்துள்ளார்

  • Nov 21, 2024 - 10:54 AM
  • 0 Comments

மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ் அபேகோனும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது. இரு நாட்டினதும் நட்புறவு, கல்வி கலாச்சார, சமய, விஞ்ஞான தொழில் நுட்பத்துறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன், இலங்கையில் தென்கொரியா செய்துள்ள முதலீடுகள் தொடர்பாகவும்,கொரியாவில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்பு தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

செய்திகள்

ஜனாதிபதி அநுர தமிழ் மக்களை ஏமாற்ற மாட்டார்- சந்திரசேகரன்

  • Nov 17, 2024 - 10:22 AM
  • 0 Comments

தமிழ் மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதும், தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை நிட்சம் நிறைவேற்றப்படும் தேசிய மக்கள் சக்தி, வடகிழக்கில் பெற்றுள்ள வெற்றி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடகிழக்கு வெற்றி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலின்போது, ரணிலும் ; சஜித்தும் தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரித்து பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. ஆகவே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் […]

செய்திகள்

தேர்தல்கள் சட்டத்துக்கும் பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜதுரை ஹஷான்

  • Nov 13, 2024 - 04:51 PM
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் 1;3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்துக்கும் பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பொலிஸ் உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்களித்தன் பின்னர் வீடுகளுக்கு செல்லுங்கள் பொது இடங்களில்  சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவதை இயலுமான வகையில் தவிர்த்துக் கொள்ளுங்கள். தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் பொலிஸ்மா அதிபரும் […]

செய்திகள்

கொழும்பில் சர்வதேச பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • Nov 13, 2024 - 02:10 PM
  • 0 Comments

  ஜூலை 2ம் திகதி ஆடம்பர தொடர்மாடியொன்றிலிருந்து இரண்டு மாணவர்கள் விழுந்து தற்கொலை செய்தார் என தகவல் தெரிவித்த போதிலும் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான ஜிவொன் ஜொரொ சிங்கின் பெற்றோர் அதனை நிராகரித்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் பல தவறாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது  ஏனையவர்களிற்கு உதவும் ஜிவோன் எனும் மாணவனின் மனோபாவமே  தொடர்மாடியியிலிருந்து விழுந்து அவர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்தது. அன்றைய தினம் தனது உதவி தேவையாகயிருந்த ஒருவருக்கு ஜிவோன் உதவி […]

உலகம் செய்திகள்

கனேடிய இந்துக்களும் அனைவரும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்

  • Nov 9, 2024 - 02:59 PM
  • 0 Comments

இந்தியா-கனடா இடையேயான உறவில் தொடர்ந்தும் விரிசல் பெரிதாகின்றது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்து முரண்பாடு ஆரம்பமானது அணிமையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கனடா அறிவித்ததையடுத்து இரு நாட்டு உறவிலும் விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் […]

செய்திகள்

டிரம்பை கொல்ல செய்ய திட்டமிட்டவரே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார் – அமெரிக்கா.

  • Nov 9, 2024 - 02:35 PM
  • 0 Comments

  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிட்ட போது அவரை கொலை செய்ய திட்டமிட்டவரிடமே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என ஆப்கானை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. குறித்த நபரிடம் இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஈரான் இராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை சேர்ந்த […]

செய்திகள்

முன்னாள் எம்பி ஆனந்தனையும் செல்வத்தையும் பற்றிய எல்லா உண்மைகளை சொல்லவேண்டி வரும். எமில்காந்தன்.

  • Nov 4, 2024 - 02:36 PM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம்அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது முழு வரலாற்றையும் வெளியே சொல்லவேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டாமென வன்னி மாவட்ட சுயேட்சை வேட்பாளரான எமில்காந்தன் தெரிவித்துள்ளார் வவுனியாவில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வன்னி தேர்தல் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது ஆதரவாளர்கள் தமது சின்னமான கோடாலிச் சின்னத்தை தொடர்ச்சியாக விமர்சிக்கிறார்கள் என […]

செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

  • Nov 4, 2024 - 12:53 PM
  • 0 Comments

  நாடாளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவைத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் திகதியானது அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்; விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. தேர்தல் சட்டத்தின் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp