செய்திகள்

இந்திய மீனவர்களுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை – அமைச்சர் சந்திரசேகரன்!

  • Dec 27, 2024 - 10:31 PM
  • 0 Comments

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது என கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன்; இன்று (27) தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. இனி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. மீன்பிடி அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும். அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றது. மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் […]

இந்தியா செய்திகள்

அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார் – திருமாவளவன்

  • Dec 27, 2024 - 03:17 AM
  • 0 Comments

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆதங்கத்துடன் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெள்ளிக்கிழமை (27) காலை 10 மணிக்கு அவரது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது’ என அவர்அறிவித்துள்ளார். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி […]

உள்ளூர் செய்திகள்

வவுணதீவு,சிப்பிமடு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

  • Dec 27, 2024 - 03:05 AM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. வவுணதீவு,காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த 51வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை காலை வீட்டிலிருந்து சென்றவர் இதுவரையில் வீடு திரும்பாமையினால் உறவினர்கள் தேடியுள்ள நிலையில் சடலமாக குறித்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். குறித்த பகுதிக்கு வந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் […]

உள்ளூர் செய்திகள்

வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள்!

  • Dec 27, 2024 - 02:44 AM
  • 0 Comments

மோசமான வானிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2024/25 பெரும்போக நடவடிக்கையில் கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணி தற்போது வேளாண் வளர்ச்சித் துறையின் உதவியுடன் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் பங்களிப்புடன் செய்யப்படுகிறது. இவற்றில் பொலன்னறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் சேத ஆய்வு தற்போது நிறைவடைந்துள்ளது. இதுதவிர மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் 29 […]

இந்தியா செய்திகள்

286 வகையான உணவுகளுடன் களைகட்டிய மெரினா உணவுத் திருவிழா!

  • Dec 26, 2024 - 02:00 AM
  • 0 Comments

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சென்னை மெரினாவில் கடந்த 20-ந்தேதி மகளிர் சுய உதவிக்குழுவினரின் உணவுத் திருவிழா தொடங்கியது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. முழுக்க முழுக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களின் கைப்பட சமைத்து வழங்கும் உணவுகளே இங்கு விற்பனை செய்யப்பட்டது. உணவுத் திருவிழாவில் ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, தருமபுரி ரவா கஜூர், சாமை வெண்பொங்கல், தினை இனிப்பு பொங்கல், […]

செய்திகள்

மட்டக்களப்பில் 12 கைதிகள் விடுதலை

  • Dec 25, 2024 - 01:09 PM
  • 0 Comments

கிறிஸ்மஸ் தினத்தையிட்டு இன்று (25) மட்டக்களப்பு சிறைச்சாலையிலதண்டனை அனுபவித்த 12 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்ற இந்த 12 பேருக்கும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

செய்திகள்

சீனக் கப்பலில் சிகிச்சை பெற்றவர்களை பார்வையிட்ட பிரதமர் ஹரிணி பார்வையிட்டார்

  • Dec 25, 2024 - 12:37 PM
  • 0 Comments

சீனாவின் 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான பீஸ் ஆர்க் என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார். பீஸ் ஆர்க் என்ற இந்த கப்பல் டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 2024 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை இலங்கையில் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகளைகளை வழங்குகின்றார்கள் இதன் ஊடாக இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கும் பொது […]

செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

  • Dec 25, 2024 - 10:48 AM
  • 0 Comments

அமைச்சரவை உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுவுக்கான சட்டமூலத்தை தயாரிக்க அனுமதியளித்துள்ளது திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கனடா செய்திகள்

பிரம்டனில் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் கைது!

  • Dec 25, 2024 - 01:34 AM
  • 0 Comments

பிரம்டன் பகுதியில் மனித கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரம்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட மூன்று பேரை பொலிஸார் மீட்டுள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு எவ்வித ஆபத்தும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். இதையும் படியுங்கள்>கனடாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றம்! https://www.youtube.com/@pathivunews

செய்திகள்

அரிசி இறக்குமதிக்கு அமைச்சர் அனுமதி

  • Dec 24, 2024 - 08:30 AM
  • 0 Comments

அரிசி தட்டுப்பாட்டை இல்லாதொழிப்பதற்கு எத்pர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார் சந்தையில் நிலவும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 20ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, இதுவரை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அரிசியின் அளவு 67,000 மெற்றிக் தொன்களாகும். எவ்வாறாயினும், அரசினால் இறக்குமதி செய்யப்படும் 70,000 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தினால் ஓர்டர் செய்யப்பட்ட […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp