e0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0ae9ae0aeaae0af88e0aea4e0af8d e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af88 e0ae85e0ae9fe0af81e0aea4 | Pathivu News உள்ளூர்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டம்.

  • Oct 28, 2024 - 01:40 AM
  • 0 Comments

இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் […]

e0ae9ae0ae9ae0aebfe0ae95e0aeb2e0aebe e0aeb0e0aeb5e0aebfe0aeb0e0aebee0ae9ce0af8d e0aeb5e0af80e0ae9fe0af8de0ae9fe0aebfe0aea9e0af8d | Pathivu News செய்திகள்

சசிகலா ரவிராஜ் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

  • Oct 26, 2024 - 05:01 PM
  • 0 Comments

.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

e0aea8e0aebee0ae9fe0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af81e0ae95e0af8de0ae95e0aebee0aea9 | Pathivu News செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை விநியோக ஆரம்பம்.

  • Oct 26, 2024 - 12:33 PM
  • 0 Comments

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (27) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 நடைப்பெறவுள்ள. வாக்கெடுப்புக்கான சகல பணிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது. இம்முறை அரசியல் கட்சி சார்பில் 5,464 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3357 வேட்பாளர்களுமாக மொத்தம் அடிப்படையில் 8821 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர் அட்டைகளை இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது. தபால் சேவையாளர்களின் சகல விடுமுறைகளும் பொதுத்தேர்தல் நிறைவடையும் திகதி வரை […]

e0ae8ee0aeb2e0aebfe0ae95e0af8de0ae95e0aebee0aeafe0af8de0ae9ae0af8de0ae9ae0aeb2e0aebee0aeb2e0af8d e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8d | Pathivu News செய்திகள்

எலிக்காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.

  • Oct 25, 2024 - 10:43 AM
  • 0 Comments

இதில் சங்கரத்தையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி சுகயீனமான நிலையில் சங்கானைப் பிரதேச வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டிருந்தார் அவரின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படாத நிலையில் மறுநாள்; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் . சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனையில் எலிக் காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae95e0af82e0ae9fe0af8de0ae9fe0aea3e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d | Pathivu News உள்ளூர்

தமிழ் மக்கள் கூட்டணியின் பிரச்சார நடவடிக்கையை கஜேந்திரக்குமார் குழப்புகின்றார் – வி.மணிவண்ணன்

  • Oct 25, 2024 - 06:43 AM
  • 0 Comments

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின்; பிரசார நடவடிக்கையை குழப்பும் நோக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தூண்டுதலில் பருத்தித்துறை பொலிஸார் செயற்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளாhர் பருத்தித்துறை பிரதேசத்pல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட 2; கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பருத்தித்துறை நகர பகுதியில்; வரதராஜன் பார்த்தீபன் தலைமையிலான அணியினர் தேர்தல் […]

e0aea8e0aebee0aeaee0aeb2e0af8d e0ae87e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7 e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0aeaae0af8d e0aeaa | Pathivu News செய்திகள்

நாமல் இராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உள்ளார்.

  • Oct 24, 2024 - 10:54 AM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்று (24) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு விடுக்கப்ட்ட அழைப்பையடுத்து அவர் சென்றுள்ளார். என்ன காரணத்திற்காக அழைக்கப்பட்டதாக தனக்கு தெரியது என நாமல் தெரிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்கு இது சிறந்த வழியென தெரிவித்துள்ள நாமல் தான் பொய் சொல்பவனல்லவெனவும் பொறுப்புடன் பதில் சொல்பவன் என மேலும் தெரிவித்துள்ளார்.

e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aebee0aeb3e0af8d e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8d e0ae9ce0af8be0aea9e0af8de0aeb8e0af8d | Pathivu News செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Oct 23, 2024 - 12:58 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகததால் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

e0ae88e0aeb8e0af8de0ae9fe0af8de0ae9fe0aeb0e0af8d e0aea4e0aebee0ae95e0af8de0ae95e0af81e0aea4e0aeb2e0af8d e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8d | Pathivu News செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய ரணில் ஏன் குழுவை நியமித்தார் சந்தேகம் வெளியிட்டார்- பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

  • Oct 22, 2024 - 09:19 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் நியமித்த குழுவின் விசாரணைகளின் நம்பகதன்மை குறித்து சந்தேகம் இருப்பதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏஎன்ஜே அல்விஸ் தலைமையில் குழு அமைத்ததன் உள்நோக்கம் என்னவென மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். ஷானி அபயசேகரவையும் ரவி செனிவிரத்னவையும் அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டதா என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

e0ae93e0aeafe0af8de0aeb5e0af81e0aeaae0af86e0aeb1e0af8de0aeb1 e0aea8e0af80e0aea4e0aebfe0aeafe0aeb0e0ae9ae0aeb0e0af8d e0ae85e0aeb2e0af8d | Pathivu News செய்திகள்

ஓய்வுபெற்ற நீதியரசர் அல்விஸின் அறிக்கையை நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

  • Oct 22, 2024 - 03:57 PM
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் நேற்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அருட்தந்தை சிறில் காமினி மேற்கண்டவாறு தெரிவித்தார். பொரளையிலுள்ள அமைந்துள்ள பேராயர் இல்லத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே சிறில் காமினி இவ்வாறு தெரிவித்தார். ‘கொலை விசாரணையில் சாட்சியங்களை மறைத்தமை மற்றும் அழித்தமை தொடர்பான குற்றவியல் குற்றச்சாட்டைப் பெற்றுள்ள பிரசன்ன அல்விஸின் சகோதரியான ஏ.எம்.ஜே. டி அல்விஸை இந்தக் குழுவின் […]

e0ae85e0aeaee0af86e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aebee0aea9e0af8ae0aeb2e0aebf e0ae95e0af8be0aeaa | Pathivu News உலகம்

அமெரிக்காவில் வானொலி கோபுரத்துடன் ஹெலிகொப்டர் மோதி விபத்து 4 பேர் பலி.

  • Oct 22, 2024 - 03:42 PM
  • 0 Comments

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும். விபத்து நடைப்பெற்ற பகுதியில் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp