செய்திகள்

மினறல் தண்ணீர் போத்தலுடன் DTNA இன் உயர்மட்ட குழுக் கூட்டம் நடைப்பெற்றது

  • Jan 5, 2025 - 07:02 PM
  • 0 Comments

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளத்தில் இன்று (05) நடைபெற்றது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடியுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை சந்திக்கும் விதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது இந்த கலந்துரையாடலில் பராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களான […]

செய்திகள்

ஜெனிவா குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழு நியமிக்கப்படவுள்ளது

  • Jan 5, 2025 - 06:50 PM
  • 0 Comments

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிகப்பதற்கு விசேட குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜேவிபி அரசு […]

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மக்கள் அச்சமுற தேவையில்லை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் பொலிஸ் மா அதிபர்

  • Jan 5, 2025 - 06:40 PM
  • 0 Comments

சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ் நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில் கடந்த வாரத்தில் யாழ் நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு […]

செய்திகள்

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுதினம் அனுஸ்டிப்பு

  • Jan 5, 2025 - 06:15 PM
  • 0 Comments

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது நினைவு தினம் தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (05) காலை அனுஸ்டிக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக உள்ள கொட்டகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.  

உள்ளூர் செய்திகள்

500 மில்லியன் இழப்பீடு கோரும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்!

  • Jan 5, 2025 - 03:00 PM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித வெளியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, 500 மில்லியன் ரூபா முதலீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களுக்காக தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்தல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி சட்டத்தரணி சம்பத் யாலேவத்தவினால் குறித்த கடிதம் […]

உள்ளூர் செய்திகள்

யாழில் வன்முறைக் கும்பலின் அட்டகாசம்:அதிர்ச்சி காணொளி!

  • Jan 4, 2025 - 09:52 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலுள்ள மதுபான சாலையொன்றில் நுழைந்து வன்முறைக் கும்பலொன்று தாக்குதல் நடாத்திய அதிர்ச்சி சிசிரிவி காணொளிகள் வெளியாகியுள்ளது. கடந்த 31.12.2024 ஆம் திகதியன்று யாழ் நகரிலுள்ள மதுபான சாலையொன்றிற்குள் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு வாள்களுடன் வன்முறைக் கும்பலொன்று நுழைந்துள்ளது. இதன் போது குறித்த மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சிசிரிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை […]

உள்ளூர் செய்திகள்

வடமாகணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது!

  • Jan 4, 2025 - 09:40 PM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் வட மாகாணத்திற்குள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தென்பகுதியில் உள்ள தனியார் துறையுடன் போட்டி போடக்கூடிய பல சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்கள் வட மாகாணத்தில் கூட்டுறவு துறையினூடாக உருவாக்கப்பட வேண்டும் என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட கூட்டுறவு சபை மற்றும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியும் இணைந்து தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள், […]

செய்திகள்

கிளிநாச்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்

  • Jan 3, 2025 - 07:10 PM
  • 0 Comments

கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது நீங்கள் அறிந்ததே இந் நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று (02) உயிரிழந்தார். குறித்த குழந்தையின் இறுதிக் கிரியைகள் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற நிலையில், இன்றைய தினம் 34 வயதுடைய குறித்த குடும்பப் பெண்ணின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது. குடும்பத் தலைவரும் மற்றொரு மகனும் தொடர்ந்தும் சிகிச்சை […]

விளையாட்டு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நிலைகுலைந்தது இந்திய அணி

  • Jan 3, 2025 - 03:03 PM
  • 0 Comments

சிட்னி விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான தீர்மானம் மிக்க ஐந்தாவதும் கடைசியுமான போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தியது. வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய முதலாம் நாள் ஆட்டத்தில் 194 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட 11 விக்கெட்களில் ஒரு விக்கெட் மாத்திரமே சுழல்பந்துவீச்சாளருக்கு சொந்தமானது. கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய இந்தியாவின் வழமையான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா இந்தப் போட்டியிலிருந்து […]

செய்திகள்

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

  • Jan 3, 2025 - 02:53 PM
  • 0 Comments

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், மற்றும் பெற்றோர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதிபர் மீதான குற்றச்சாட்டு முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர் கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைக்கின்றார் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றார். 83 ஆசிரியர்களாக இருந்த ஆசரியர்களின் எண்ணி;ககையை 63 ஆக குறைத்தார் பாடசாலையின் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலையின் அகச்சூழல் சீரின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளது. […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp