செய்திகள்

இராணுவத்தினரும் பொலிஸாருமே துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர்- அமைச்சர் ஆனந்த விஜேபால

  • Jan 21, 2025 - 07:15 PM
  • 0 Comments

அண்மைய காலங்களில் நாடெங்கும் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில்; ஒரு இராணுவ மேஜர், உட்பட 6 அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் குற்றச் செயல்கள் தொடர்பில் நீண்டநேரம் விளக்கமளித்த அவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மக்கள […]

செய்திகள்

வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் கைது அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டில்

  • Jan 21, 2025 - 04:18 PM
  • 0 Comments

அரச காணிக்கான போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் […]

செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தும்- பிமல் ரத்நாயக்க

  • Jan 21, 2025 - 03:51 PM
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு பகுதியில்லை. அது அரசாங்கத்தின் அபிலாசையும் இல்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எனினும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை அவதானமாக பயன்படுத்துவோம் என நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்  

செய்திகள்

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றமானது இலங்கையை திருப்திபடுத்த இந்தியாவின் கைங்கரியம் -பொ.ஐங்கரநேசன்

  • Jan 21, 2025 - 03:39 PM
  • 0 Comments

யாழ். கலாசார நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்து பொ.ஐங்கரநேசன் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது யாழ்ப்பாண கலாசார நிலையம் யாழ். மாநகரசபைக்கு உரித்தான காணியில் இந்திய அரசின் நன்கொடையில் உருவானது. இதற்கான உடன்படிக்கையில் யாழ். கலாசார நிலையத்தை முகாமைத்துவம் செய்கின்ற குழுவில் யாழ் மாநகரசபையினதும் வடமாகாண சபையினதும் சார்பில் ஒவ்வொருவர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டு சபைகளினதும் கலந்தாலோசிப்புகளின்றி இப்பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது கோத்தபாய அரசாங்கம் யாழ். கலாசார நிலையத்தின் பெயரை மாற்றுமாறு முன்னர் […]

உலகம்

அமெரிக்கவுக்கு இன்று விடுதலை நாள்- புதிய ஜனாதிபதி டிரம்ப்

  • Jan 21, 2025 - 06:42 AM
  • 0 Comments

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். இதன்பின்னர் பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், ஜனவரி 20-ஆம் தேதி தான் அமெரிக்கவுக்கு விடுதலை நாள். அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பமாகியுள்ளது .உலகம் மதிக்கப்படும் அமெரிக்கா மாறும். இதுவரை இல்லாத அமெரிக்காவைக் கட்டமைப்பேன் என்னுடைய உயிர் ஒரு காரணத்திற்காகவே காக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சிறந்ததாக மாற்றுவதற்காகவே கடவுள் என்னுடைய உயிரை காப்பாற்றியுள்ளார்.’ என்றார். எனது வெற்றி அமெரிக்கா முழுமைக்கும் ஆனது. அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். அமெரிக்காவுக்கே முதலில் முன்னுரிமை என்பதைச் செயல்படுத்துவேன். […]

செய்திகள்

தொடரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

  • Jan 20, 2025 - 02:50 PM
  • 0 Comments

தொடரூந்து சாரதிகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தர பதவி உயர்வு பரீட்சை காரணமாக மூன்று நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் வழமை போன்று இயங்கும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் பரீட்சைக்கு தயார்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வரை பல தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. எவ்வாறாயினும், நேற்றைய தினம் பிற்பகல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவில்லை என தொடரூந்து திணைக்களம் மேலும் […]

செய்திகள்

தொடர் மழை காரணமாக கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

  • Jan 19, 2025 - 05:39 PM
  • 0 Comments

தற்போது நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். இதற்கிடையில், இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால், நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சைகளை எதிர்வரும் சனிக்கிழமை (25) நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

செய்திகள்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது

  • Jan 18, 2025 - 06:39 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து இன்று (18) 38 வயதுடைய பிரதேசவாழ் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் இவரது உறவினர்கள் இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இவர் இன்றைய தினம் அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குளத்திற்கு அருகிலிருந்து இவரது துவிச்சக்கர வண்டி மற்றும் ஆவணங்கள் என்பவை பொலிஸாரால் […]

செய்திகள்

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திருவள்ளுவர் கலாசார மையம் ஆனது

  • Jan 18, 2025 - 03:55 PM
  • 0 Comments

இந்தியாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என இன்று சனிக்கிழமை (18) பெயர் மாற்றம் செய்யப்பட்டது திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, […]

உள்ளூர்

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்!

  • Jan 15, 2025 - 01:45 PM
  • 0 Comments

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி, பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட பல சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி அனுரகுமாரதிசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமத்துடன் 24 சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளன. அத்துடன் இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் […]