முக்கிய செய்திகள்

இலங்கையில் இனப்பெருக்கம் குறைந்துள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

  • Jan 9, 2025 - 06:45 PM
  • 0 Comments

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலைமை இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ‘கடந்த 10 ஆண்டுகளில் கவனிக்கப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால், இந்த நாட்டில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2013 ஆம் ஆண்டில் 350,000 இருந்த பிறப்புகள், 2024 ஆம் ஆண்டில் 228,000 ஆகக் குறைந்துள்ளது. அந்தக் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட […]

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளையோருக்கிடையில் சாதாரணமாக போதை மாத்திரைகள் பரிமாறப்படுகின்றது

  • Jan 8, 2025 - 03:12 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் மட்டுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்று இரவு (07) கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இளைஞன் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து 50 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

உள்ளூர் செய்திகள்

யாழில் தவற விடப்பட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை கட்டிவைத்து தாக்கிய கும்பல்.!!!

  • Jan 6, 2025 - 11:17 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவர் கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழுவொன்று அவரை கட்டிவைத்து தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அத்தோடு, தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், ‘உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில் நிலத்தில் தங்க நகை போன்ற ஆபரணம் இருப்பதை அவதானித்தேன். […]

உள்ளூர் செய்திகள்

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது!

  • Jan 6, 2025 - 12:45 AM
  • 0 Comments

அம்பாறை தமன வனகமுவ பிரதேசத்தில் தொலைபேசி விற்பனை செய்யும் இடம் என்ற போர்வையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் நிலையமாக இயங்கி வந்த வீடொன்று நேற்று (5) அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டு மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் 29, 20 மற்றும் 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். போலி நாணயத்தாள்களை அச்சடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி உட்பட பல உபகரணங்கள் பொலிஸாரால் […]

செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் இலங்கைக்கு எச்சரிக்கை

  • Jan 3, 2025 - 03:34 PM
  • 0 Comments

சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னர் மேலதிக தகவல்களை பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)31.12.2024

  • Jan 1, 2025 - 12:43 AM
  • 0 Comments

திருகோணமலை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒதுங்கியது திருகோணமலையில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி நெறி நடைப்பெற்றது யூ ரியூப் சனலை மீட்க முடியவில்லை- பொலிஸ் ஊடகப் பிரிவு 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் பொலிஸிக்கு தண்ணி காட்டிய ஹேக்கர்ஸ் அச்சக திணைக்கள இணையம் மீதும் சைபர் தாக்குதல் https://youtu.be/cUcX_A02X8g

செய்திகள்

சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதிக்கவில்லையென்கிறார் அமைச்சரவை பேச்சாளர்

  • Dec 31, 2024 - 09:28 PM
  • 0 Comments

நாட்டின் வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவத்தில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் சில விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிக்கல் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (31) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தற்போதுள்ள பொறிமுறைக்கு உட்பட்டு தான் நிவாரண திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதேவேளை நாணய நிதியம் மாற்றங்களை ஏற்படுத்த முடியாத […]

செய்திகள்

பொலிஸிக்கு தண்ணி காட்டிய ஹேக்கர்ஸ்

  • Dec 31, 2024 - 09:44 AM
  • 0 Comments

பொலிஸாரின் உத்தியோகபூர்வ யூடியூப் சனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இப்போது அதன் கட்டுப்பாடு அதன் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிட்டது. இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தமது முகநூல் பக்கத்தில் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்

செய்திகள்

சிறைச்சாலைகளில் போதைப்பொருட்களுக்கு இடமளிக்க வேண்டாம் ஜனாதிபதி பணிப்புரை!

  • Dec 30, 2024 - 10:03 PM
  • 0 Comments

கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கினார். அத்துடன் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நபர்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்த ஜனாதிபதி, அதற்காக இணையவழி (ஒன்லைன்) முறையைப் பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார். ஒன்லைன் முறையின் ஊடாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கண்டறிந்து அது தொடர்பான […]

செய்திகள்

வவுனியாவில் அரசியல் கைதிகளுக்காக கையெழுத்துப் போராட்டம்

  • Dec 28, 2024 - 06:00 PM
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியே கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தபால் நிலையத்துக்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் மதத் தலைவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.  

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp