செய்திகள் முக்கிய செய்திகள்

ஐயோ… வீட்டு சாப்பாட்டை சாப்பிட விடுங்கோவன்- முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன

  • Aug 30, 2025 - 08:28 PM
  • 0 Comments

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை வைத்தியர்கள் அவரை பரிசோதித்தபோது, வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அளவுக்கு உடல்நிலை பிரச்சினை எதுவும் இல்லை எனவும் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுடன் தொடர்பில், தனது கைது தொடர்பான பிடியாணை உத்தரவை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் முன்னர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் ஏ9 வீதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு

  • Aug 29, 2025 - 11:14 AM
  • 0 Comments

கிளிநொச்சி ஏ9 வீதியில், கரபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடத்தில் இன்று  அதிகாலை சுமார் 5.30 மணியளவில் பயங்கரமான விபத்து நிகழ்ந்தது. சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேரூந்து பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட போது, பின்னால் வந்த ரிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில், ரிப்பருக்கு […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்

  • Aug 29, 2025 - 11:00 AM
  • 0 Comments

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜராகியதை தொடர்ந்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்காக தன்னை கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. இதனையடுத்து, இன்று காலை ஆஜரான பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கெதிராகவே தொழில்சங்க போராட்டம்- சம்பத் பிரேமரத்ன

  • Aug 29, 2025 - 07:59 AM
  • 0 Comments

இலங்கை போக்குவரத்து சபையின் (ளுடுவுடீ) சில தொழிற்சங்கங்கள் தங்களது நான்கு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தன. முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜனபலவேகயாவுடன் இணைந்துள்ள ளுடுவுடீ ‘சமகி தலைவரான நிரோஷன் சம்பத் பிரேமரத்னே, அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் (Nவுஊ) தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். குறிப்பாக, அரச மற்றும் தனியார் பஸ்களுக்கு ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது அவர்களின் எதிர்ப்புக்குரிய முக்கிய காரணமாகும். இதுகுறித்து தனியார் பேருந்து […]

உள்ளூர் செய்திகள்

இன, மத அடிப்படையிலான கட்சியாக அரசியல் கட்சிகள் பதிவதற்கு தடை- தேர்தல் ஆணைக்குழு

  • Aug 28, 2025 - 09:17 AM
  • 0 Comments

தேர்தல் ஆணைக்குழு இன அல்லது மத நோக்கங்களுடன் புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஊடகங்களிடம் கூறியதாவது: ‘அரசியல் கட்சிகள் பதிவு செய்யும் போது, அவை இன அல்லது மத அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளனவா என்பதை நாங்கள் பரிசோதிக்கிறோம். இதற்கு உரிய சட்டப் பிரிவுகள் உள்ளன. சந்தேகம் இருந்தால் அவற்றின் படி நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியல் […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணியில் இதுவரை 166 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

  • Aug 28, 2025 - 09:04 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணியில் உள்ள சிந்து பாத்தி மயானம் அருகே அமைந்துள்ள புதைகுழியில் இருந்து இதுவரை மொத்தம் 166 மனித எலும்புக்கூடுகள் அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வின் ஐந்தாவது கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இது எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் ஆய்வுகளின் அடிப்படையில் இப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அகழாய்வு யாழ்ப்பாண நிதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இதில் கௌரவ […]

உள்ளூர் செய்திகள்

எதிர்க்கட்சியினரின் AKD கோ கோம் போராட்டம் நேற்று ஆரம்பம்

  • Aug 27, 2025 - 06:50 AM
  • 0 Comments

கொழும்பில் எதிர்க்கட்சி நடத்திய போராட்டத்தில் ஒருவர் பொலிஸ் அதிகாரி காயமடைந்தார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் அருகே நேற்று (26-08) பிற்பகல் பெரிய மக்கள் கூட்டம் திரண்டது. இதனால் அப்பகுதியில் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ‘ஒடுக்குமுறைக்கு எதிராக’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக சிறையில் வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி […]

உள்ளூர் செய்திகள்

ரணிலுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என ஆராய சஜித் தலைமையில் கட்சி கூடுகின்றது

  • Aug 25, 2025 - 09:25 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிக ஆதரவு வழங்குவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று கூட்டம் நடத்தவுள்ளது. தற்போது அவர் விளக்கமறியலில் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து கைது நடவடிக்கையை கண்டித்து வருகின்றன. நேற்று (24) கொழும்பில் பல கட்சிகள் ஒன்று கூடி, விக்கிரமசிங்க கைது ‘ஜனநாயக விரோத செயல்’ மற்றும் ‘அரசியல் பழிவாங்கல்’ என்று விமர்சித்தன. எனினும், சஜித் பிரேமதாசா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரா அந்த ஊடகச் சந்திப்பில் […]

உள்ளூர் செய்திகள்

அநுர அரசின் அசமந்த போக்கினால் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

  • Aug 25, 2025 - 09:04 AM
  • 0 Comments

மருத்துவர்களின் இடமாற்றத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய அபாய நிலை காரணமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதேவேளை, அவசர சிகிச்சை பிரிவுகள், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக நோய் பிரிவுகள், இராணுவ வைத்தியசாலை, தேசிய மனநல வைத்திய நிறுவனம் போன்ற முக்கிய பிரிவுகளின் சேவைகள் இடையூறு இன்றிப் செயற்;படும் என சங்கம் அறிவித்துள்ளது. அரச மருத்துவ […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தபால் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது

  • Aug 24, 2025 - 08:34 PM
  • 0 Comments

தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று நிறைவுக்கு வந்தது. அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டின்பேரில் பணிப்புறக்கணிப்பு உடனடியாக முடிவுக்கு வந்ததாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார். கடந்த 17ஆம் திகதி முதல் 19 கோரிக்கைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp