உள்ளூர் செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணையில் வெளிப்படத்தன்மை இருக்குமென்கிறார் பிரதமர் ஹரணி

  • Jul 11, 2025 - 09:45 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிவரும் புதிய விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிப்போம். இதில் மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு எதுவும் இல்லையென பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். சமிந்த விஜேசிறி தனது கேள்வியில், இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கூட்டுறவுத்துறையை வலிமைமிக்கதாய் மாற்ற மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டுமென்கிறார் நிசாம் காரியப்பர் எம்.பி

  • Jul 11, 2025 - 09:00 PM
  • 0 Comments

கூட்டுறவு தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் மத்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் அடக்கி வாசிப்பது அவசியமானது. கூட்டுறவு முறைமையை வினைத்திறனாக்க வேண்டுமாயின் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றியதாவது, கிராமிய கூட்டுறவு வங்கிக் கட்டமைப்பை உரிய முறையில் மேற்பார்வை […]

உள்ளூர் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பால் 3 இலட்சம் பேர் வேலையிழக்கும் நிலையேற்பட்டுள்ளது

  • Jul 11, 2025 - 07:00 AM
  • 0 Comments

அமெரிக்கா, 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு 30 வீத வரியை விதிக்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, இலங்கையின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய ஆடை ஏற்றுமதித் துறையை ஆழமாகக் குலைக்கக்கூடியது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்தத் துறையில் சுமார் 300,000 பேர் நேரடியாக வேலை செய்து வருகின்றனர். மேலும், தனியார் தையல் தொழிலாளர்கள், சில்லறை தொழிலாளர்கள், மற்றும் பகுதி நேர உழைப்பாளர்கள் என ஏராளமான குடும்பங்கள் இதன் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்டது வெள்ளை மாளிகை

  • Jul 10, 2025 - 12:34 PM
  • 0 Comments

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09-07) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தாதியர்களின் ஓய்வூதிய வயது 60 என அரசினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

  • Jul 8, 2025 - 07:34 AM
  • 0 Comments

செவிலியர்களின் கட்டாய ஓய்வூதிய வயதை 60 ஆகக் குறைத்ததால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் உருவாகக்கூடும் என அரசாங்க சேவை ஒன்றிய செவிலியர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தெரிவித்ததாவது, ‘ஓய்வூதிய வயதைக் குறைத்ததால், தற்போது நிலவுகின்ற செவிலியர் பற்றாக்குறை மேலும் மோசமாகும்.’ முந்தைய காலங்களில், ஓய்வூதிய வயதை 63 வரை நீடிக்க வேண்டும் எனக்கோரி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக சுகாதார அமைச்சால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள்

அரசாங்கம் செய்த படுகொலைகளை அரசாங்கமே விசாரிக்கமுடியாது- தமிழரசுக்கட்சி

  • Jul 8, 2025 - 07:03 AM
  • 0 Comments

உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை என கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்வதாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில், நாட்டின் உள்ளக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இன்று முதல் தினமும் தொடரூந்து சேவை

  • Jul 7, 2025 - 08:15 AM
  • 0 Comments

கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசியல்வாதிகளின் தாளத்திற்கு ஆடாத அரச சேவையினை உருவாக்க வேண்டுமென்கிறார் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பணிப்பாளர்

  • Jul 6, 2025 - 12:33 PM
  • 0 Comments

அண்மைய நாட்களாக நாட்டில் ஊழல், மோசடி ஊறிப்போயுள்ளது. குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக மாத்திரம் ஊழலை நிறுத்த முடியாது. முதலில் மனப்பான்மை ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும்.தமக்கு உரிமை இல்லாத ஒன்றை வழங்கும் போது அதனை நிராகரிக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும். அரச அதிகாரிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டும். அரசியல்வாதிகள் கூறும் தவறான தீர்மானங்களை நிறைவேற்றாத அரச சேவை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்ற […]

உள்ளூர் செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் வலிக்கு நீதி வழங்க வேண்டுமென்கிறார் நீதியமைச்சர்

  • Jul 6, 2025 - 11:45 AM
  • 0 Comments

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் துன்பத்துக்கு முகங்கொடுத்துவருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதும், அவர்களுக்குரிய நீதியை வழங்குவதும், அவர்களுக்கான பொருளாதார மற்றும் சமூக ரீதியான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதும் இன்றியமையாததாகும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான முதலாவது தேசிய மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்றது. அதன் நீட்சியாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான இரண்டாவது தேசிய மாநாடு கடந்த ஜுன் மாதம் 25 – […]

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் இதுவரை 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!

  • Jun 29, 2025 - 08:13 PM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 26ஆம் திகதி ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது புதைகுழி ஒன்றில் இருந்து மனித எலும்பு கூட்டு தொகுதிகளும், பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை, செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp