e0aeaae0af81e0aeb2e0aeaee0af8de0aeaae0af86e0aeafe0aeb0e0af8d e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d | Pathivu News செய்திகள்

புலம்பெயர் இலங்கையர்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை அந்தந்த நாடுகளின் தூதரகங்களில் பெறலாம்

  • Jan 6, 2025 - 09:47 PM
  • 0 Comments

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் டிஜிட்டல் வசதிகள் செய்யப்பட்டு இன்று (06) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைய இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 07 தூதரகங்களுக்கு இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஜப்பான், கட்டார், குவைத் தூதரகங்கள், மிலானோ, டொறொன்டோ, மெல்பேர்ன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளின் […]

e0aea8e0af80e0aea4e0aebfe0aea4e0af8de0aea4e0af81e0aeb1e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0aeaee0af80e0aea4e0af81 e0aeaee0ae95e0af8de0ae95 | Pathivu News செய்திகள்

நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு – ஜனாதிபதி

  • Jan 6, 2025 - 06:35 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என இதன் போது ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்

e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aeaee0af8d e0aeaee0ae9fe0aea4e0af8de0aea4e0ae9fe0aebf e0aeaae0ae95e0af81e0aea4 | Pathivu News செய்திகள்

யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் கையெழுத்துப் போராட்டம் தொடர்கின்றது

  • Jan 6, 2025 - 05:42 PM
  • 0 Comments

அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாணத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆறு நாட்கள் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, ஏழாவது நாளாக இன்று யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இக் கையெழுத்து போராட்டத்தில் அரசியல்வாதிகள் உட்பட பலரும் கையெழுத்திட்டனர்  

e0aeaae0af8ae0aeb2e0aebfe0aeb8e0af8d e0aea8e0aebfe0aeb2e0af88e0aeaf e0ae9ae0aebf e0ae9ae0aebf e0ae9fe0aebf e0aeb5e0aebfe0ae95e0aeb3 | Pathivu News செய்திகள்

பொலிஸ் நிலைய சி.சி.டி.விகளை காணவில்லையென பொலிஸார் முறைப்பாடு

  • Jan 6, 2025 - 04:40 PM
  • 0 Comments

கொழும்பு கோட்டை பழைய பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த 07 சி.சி.டி.வி கெமராக்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம், கோட்டை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளது. தற்போது, பொலிஸ் தலைமையகம் கொம்பனி வீதியில் உள்ள பழைய விமானப்படை தளத்தில் நிறுவப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தை அந்த இடத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் இந்த சிசிடிவி கெமராக்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பழைய பொலிஸ் தலைமையகத்தின் 5வது மாடியில் இந்த சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது  

e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0aeaee0af88e0aeaae0af8de0aeaae0af81 e0ae89e0aeb0e0af81e0aeb5e0aebe | Pathivu News செய்திகள்

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தாமதமடையக்கூடாது – கர்தினால் மல்கம் ரஞ்சித்

  • Jan 6, 2025 - 01:40 PM
  • 0 Comments

நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் தனது பதவிக்காலம் முடிவடையும் வரை காத்திருக்காமல் புதியஅரசமைப்பினை உருவாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aeb5e0aebfe0aeb0e0af8be0aea4e0aeaee0aebee0ae95 e0ae85e0ae95e0aeb4e0af8de0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae88e0ae9f | Pathivu News உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேகநபர்கள் கைது !

  • Jan 5, 2025 - 11:20 PM
  • 0 Comments

பழங்காலப் பொருட்களை திரட்டும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு மேற்கொண்ட 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அட்டுலுகம மற்றும் மீவலகந்த பகுதிகளில் நடைபெற்ற அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தந்த இடங்களில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. அதில், 25 முதல் 56 வயதிற்கு இடையிலான சீதுவ மற்றும் தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்தில், பூஜை பொருட்கள் மற்றும் அகழ்வு பணியில் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக […]

e0aeaee0aebfe0aea9e0aeb1e0aeb2e0af8d e0aea4e0aea3e0af8de0aea3e0af80e0aeb0e0af8d e0aeaae0af8be0aea4e0af8de0aea4e0aeb2e0af81e0ae9fe0aea9 | Pathivu News செய்திகள்

மினறல் தண்ணீர் போத்தலுடன் DTNA இன் உயர்மட்ட குழுக் கூட்டம் நடைப்பெற்றது

  • Jan 5, 2025 - 07:02 PM
  • 0 Comments

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளத்தில் இன்று (05) நடைபெற்றது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடியுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை சந்திக்கும் விதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது இந்த கலந்துரையாடலில் பராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களான […]

e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae85 | Pathivu News செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மக்கள் அச்சமுற தேவையில்லை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் பொலிஸ் மா அதிபர்

  • Jan 5, 2025 - 06:40 PM
  • 0 Comments

சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ் நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில் கடந்த வாரத்தில் யாழ் நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு […]

500 e0aeaee0aebfe0aeb2e0af8de0aeb2e0aebfe0aeafe0aea9e0af8d e0ae87e0aeb4e0aeaae0af8de0aeaae0af80e0ae9fe0af81 e0ae95e0af8be0aeb0e0af81 | Pathivu News உள்ளூர் செய்திகள்

500 மில்லியன் இழப்பீடு கோரும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்!

  • Jan 5, 2025 - 03:00 PM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித வெளியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, 500 மில்லியன் ரூபா முதலீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களுக்காக தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்தல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி சட்டத்தரணி சம்பத் யாலேவத்தவினால் குறித்த கடிதம் […]

e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aea9e0af8de0aeaee0af81e0aeb1e0af88e0ae95e0af8d e0ae95e0af81e0aeaee0af8de0aeaae0aeb2e0aebf | Pathivu News உள்ளூர் செய்திகள்

யாழில் வன்முறைக் கும்பலின் அட்டகாசம்:அதிர்ச்சி காணொளி!

  • Jan 4, 2025 - 09:52 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலுள்ள மதுபான சாலையொன்றில் நுழைந்து வன்முறைக் கும்பலொன்று தாக்குதல் நடாத்திய அதிர்ச்சி சிசிரிவி காணொளிகள் வெளியாகியுள்ளது. கடந்த 31.12.2024 ஆம் திகதியன்று யாழ் நகரிலுள்ள மதுபான சாலையொன்றிற்குள் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு வாள்களுடன் வன்முறைக் கும்பலொன்று நுழைந்துள்ளது. இதன் போது குறித்த மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சிசிரிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp