உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தன்னிச்சையான நடவடிக்கையால் மக்கள் சுமையை ஏற்கிறார்கள்- CEB

  • Sep 14, 2025 - 07:04 AM
  • 0 Comments

எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கை மின்சார சபை போட்டி முறையிலான எரிபொருள் கொள்முதல் செயல்முறையை அறிமுகப்படுத்த முயன்றபோது, அதனை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மின்சாரம் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்து, அரச நிதியை பாதுகாக்கவும், தேசிய ஆற்றல் கொள்கை மற்றும் நிர்வாக தரநிலைகளுடன் இணங்கவும், உடனடியாக போட்டி அடிப்படையிலான எரிபொருள் கொள்முதல் முறையை ஆரம்பிக்க வேண்டும் என […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை மத்திய வங்கி பங்குதாரர்களின் 2025 ஆம் ஆண்டின் அரையாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது

  • Sep 13, 2025 - 09:08 AM
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டின் அரையாண்டிற்கான ளுலளவநஅiஉ சுளைம ளுரசஎநல ன் நிதியறிக்கையின் முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, நிதி சந்தை பங்கேற்பாளர்கள் கொண்டிருக்கும் நிதி அமைப்பின் மீதான நம்பிக்கை, அவர்கள் கருதும் அபாய மூலாதாரங்கள் மற்றும் அவற்றின் நிகழ்த்தகூடிய சாத்தியக்கூறுகளை சுருக்கமாக வழங்குகிறது. வெளியிடப்பட்ட முடிவுகள் பங்கேற்பாளர்களின் கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன் அவை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டாக கருதப்படமாட்டாது எனவும் விளக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு, இலங்கை நிதி அமைப்பின் மீதான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரதமருக்கும பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை

  • Sep 13, 2025 - 08:21 AM
  • 0 Comments

பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் சந்திப்பு நடத்தினார். இந்நிகழ்வில் சம்பளக் குறைப்புகள், கொடுப்பனவுகள், கூடுதல் நேர ஊதியம், பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் தமது கவலைகளை வெளிப்படுத்தினர். இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் மேலும் விவாதங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சீனா 2026 பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க ஒப்புதல்

  • Sep 13, 2025 - 08:15 AM
  • 0 Comments

சீனா 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை இலவசமாக வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசின் உதவியுடன் இயங்கும் பாடசாலைகளில் கல்வி கற்கும் 44 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையவுள்ளனர். இந்த ஒப்பந்தம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கல்வி அமைச்சு அதிகாரிகளும், இலங்கைக்கான சீன தூதரரும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டைக்கு துரத்தப்பட்டார் மகிந்த ராஜபக்ஸ

  • Sep 11, 2025 - 06:48 PM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பியுள்ளதாக நாமல் கூறினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இல்ரேலுக்கு சென்ற இலங்கை ஊடகவியலாளர்களை அரசு அனுப்பவில்லையென கௌசல்யா அரியரத்ன எம்பி தெரிவித்துள்ளார்

  • Sep 11, 2025 - 08:15 AM
  • 0 Comments

எந்தவொரு பொதுப்பணியாளரும் தனிப்பட்ட காரணத்துக்காக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள முடியும், எனவும் ஆனால் அதற்காக முறையான விடுமுறையை பெற்றிருக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கௌசல்யா அரியரத்னே, செவ்வாய்க்கிழமை (09-09) பாராளுமன்றத்தில், தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பிகர் உறுப்பினர் முஜிபுர் ர{ஹமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 16 இலங்கை ஊடகவியலாளர்கள் இஸ்ரேலில் பயணம் செய்திருந்ததைப் பற்றிப் ; முஜிபுர் ர{ஹமான் கேள்வியெழுப்பினாhர் ர{ஹமான் கூறியதாவது, இரு ஊடகவியலாளர்கள்; […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் பொலிஸாருக்குமிடையில் மோதல்

  • Sep 11, 2025 - 07:29 AM
  • 0 Comments

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் பொலிஸாருக்குமிடையில்; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் காவலர்களை அடிக்கடி மாற்றுவது சாத்தியமற்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு,தெரிவித்துள்ள நிலையில், செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வு மற்றும் உடற்கூறு ஆய்வுகளின் நம்பகத்தன்மை, அருகிலுள்ள காவல் நிலையங்களிலிருந்து அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் உறுதி செய்ய முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஊடகங்களிடம் ; கருத்து தெரிவித்த ஆணைக்குழு ஆணையாளர் நிமல் ஜி. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐஸ் போதை பொருளால் ஜேவிபியும் பொதுஜன பெரமுனவும் அரசியல் இலாபமீட்டுகின்றார்கள்- பிரதான எதிர்கட்சி

  • Sep 10, 2025 - 09:00 AM
  • 0 Comments

ஆபத்தான இரசாயனப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க அரசாங்கம் எத்தகைய திட்டங்களையும் திறனை கொண்டுள்ளது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது இதுகுறித்து நடைபெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது. எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்கா நேற்று (09-09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் குறிப்பிட்டதாவது, இலங்கைக்கு கடத்தப்பட்டதாகக் கருதப்படும், ‘ஐஸ்’ என அழைக்கப்படும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பல […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மின்சார சபை தொழில் சங்கங்கள் தொழில்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரிக்கை

  • Sep 7, 2025 - 08:17 AM
  • 0 Comments

இலங்கை மின்சார சபை (CEB) தொழிற்சங்கங்கள், தங்களது கோரிக்கைகள் செப்டம்பர் 15க்குள் நிறைவேற்றப்படாவிட்டால், அத்தியாவசிய சேவைகள், குறிப்பாக மின்சாரக் விநியோக தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்தல் நிறுத்தப்படும் என நேற்று (06-09) எச்சரித்துள்ளன. சமீபத்தில், அரசு நிறுவனங்கள் (SOEs) மறுசீரமைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் தமது நீண்டநாள் பிரச்சினைக்கு காணப்படாத காரணமாக, பல தொழிற்சங்கங்கள் தொழிலசங்க நடவடிக்கையை (work-to-rule) தொடங்கியிருந்தன. தற்போது, நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்படுவதாகவும், கோளாறுகள் மற்றும் முக்கிய சேவைகள் மட்டுமே கவனிக்கப்படுவதாகவும், ஆனால் நிர்வாகத்துடன் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தங்காலை நகரசபை செயலாளர் உட்பட 15 பேர் பலி 16 பேர் படுகாயம்.

  • Sep 6, 2025 - 06:38 AM
  • 0 Comments

எல்ல–வெளவாயைச் சாலைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து சென்ற பேருந்து 1,000 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றது. விபத்து நேற்று (05-09) நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் எட்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள், பேருந்து ஓட்டுனர் மற்றும் தங்காலை நகரசபை செயலாளர் டபிள்யூ.கே. ரூபசேன உள்ளிட்டோர் அடங்குகின்றனர். மேலும் 16 பேர் காயமடைந்த நிலையில் பதுளை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp