e0ae85e0aeb0e0af8de0ae9ae0af8de0ae9ae0af81e0aea9e0aebee0aeb5e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0ae95 e0ae95 | Pathivu News உள்ளூர் செய்திகள்

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

  • Nov 23, 2024 - 12:59 AM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். பாராளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் […]

e0aeaee0aebfe0aea9e0af8de0ae9ae0aebee0aeb0 e0ae9ae0aeaae0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0ae85e0ae9ae0aeaee0aea8e0af8de0aea4e0aeaae0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள்

மின்சார சபையின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம்

  • Nov 23, 2024 - 12:48 AM
  • 0 Comments

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணிநேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மின் துண்டிக்கப்படுவதாக பிரதேசவாழ் மக்கள் கவலை வெளியிட்டள்ளனர் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உட்பட கிராம மக்கள் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் தெரிவித்தனர். மின்சார சபையின் இச்செயற்பாட்டினால் […]

e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0ae95e0af8ae0aeb3e0af8de0ae95e0af88e0aeaae0af8d e0aeaae0aebfe0aeb0e0ae9fe0ae95e0aea9 | Pathivu News செய்திகள்

ஜனாதிபதி கொள்கைப் பிரடகன உரையை தொடங்கினார்

  • Nov 21, 2024 - 12:06 PM
  • 0 Comments

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (21) காலை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அரசின் கொள்கை பிரகடனத்தை சபையில் சமர்ப்பிக்க தொடங்கினார் இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது. சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் நியமனங்கள் உள்ளிட்ட முதற்கட்ட சம்பிரதாயங்களை அடுத்து நாடாளுமன்றம் முற்பகல் 11.30 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர், ஜனாதிபதியின் வருகையுடன் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

e0ae87e0aea9e0af8de0aeb1e0af81 e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0aeaae0af8d e0aeaae0af81e0aeb2e0aea9e0aebee0aeafe0af8de0aeb5e0af81 | Pathivu News செய்திகள்

இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பிரசன்ன, ரொஷான், ரமேஷ் ஆஜர்

  • Nov 21, 2024 - 11:28 AM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (21) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகியுள்ளனர் தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே இவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாளை (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர் […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0aeaee0aebfe0aea9e0af8de0ae9ae0aebee0aeb0 e0ae95e0ae9fe0af8de0ae9fe0aea3 | Pathivu News செய்திகள்

இலங்கையின் மின்சார கட்டணத்தை சர்வதேச நாணய நிதியமே தீர்மானிக்கும்?

  • Nov 21, 2024 - 11:15 AM
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபையின் இந்த கலந்துரையாடல் இன்று (21) காலை நடைபெறுகின்றது மின் கட்டண திருத்தம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், அவர்களின் யோசனைக்கு அமைவாக மின் கட்டண திருத்தம் தொடர்பிலான தீர்மானம் எட்டப்படும் என அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்

e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0af81 e0aeb5e0aebfe0ae9ce0aeafe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeaee0aeb1e0af88e0aeaee0af81e0ae95 | Pathivu News செய்திகள்

வடக்கு விஜயத்தில் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவுமில்லை – சீன தூதுவர்

  • Nov 21, 2024 - 10:44 AM
  • 0 Comments

வடபகுதிக்கு நாங்கள் வருவதில் எமக்கு எந்தவித மறைமுக நிகழ்ச்சியிலும் இல்லை’ என்று யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். இலங்கையின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டார். சீனத் தூதுவருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பொன்று நடைப்பெற்றது அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளாhர் இங்கு தொடர்ந்து உரையாற்றிய சீனத் தூதுவர், பொது தேர்தலில் பின்னர் வடபகுதியில் சாதகமான ஒரு நிலை உருவாகியிருக்கின்றது […]

e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aebee0aeb3e0af8d e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8d e0aeb9e0aeb0e0aebfe0aea9e0af8d | Pathivu News செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

  • Nov 20, 2024 - 11:00 AM
  • 0 Comments

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது கடந்த 11ஆம் திகதி பதுளையில் பொலிஸாருடன் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை பதுளை பொலிஸ் நிலையம் சென்ற போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர் அண்மையில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதுளை நகரில் ’10’ஆம் இலக்கம் கொண்ட சட்டைகளை அணிந்து கொண்டு நடமாடியதால் பொலிஸாருடன் முறுகல்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

e0aeaae0aebfe0aeb3e0af8de0aeb3e0af88e0aeafe0aebee0aea9e0aebfe0ae9fe0aeaee0af8d e0aeb5e0aebfe0ae9ae0aebee0aeb0e0aea9e0af88 e0aea8e0ae9f | Pathivu News செய்திகள்

பிள்ளையானிடம் விசாரனை நடைபெறுகின்றது

  • Nov 20, 2024 - 09:52 AM
  • 0 Comments

பிள்ளையான் என அழைக்கப்படும்; கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர் ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த காணொளியில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். அதில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஈஸ்ட்டர் தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது அங்கு முன்னிலையாகியுள்ளார்.      

e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0aeaae0aebfe0aeb0e0ae9ae0aeb5e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d e0aeaae0af8b | Pathivu News உள்ளூர்

மன்னாரில் பிரசவத்தின் போது இளம் தாய் மரணம். உறவினர்கள் போராட்டம்

  • Nov 20, 2024 - 09:40 AM
  • 0 Comments

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் சேயும் மரணமடைந்துள்ளதால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற இளம் தாயே நேற்று (19) மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சிசேரியன் செய்ய வைத்தியர்கள் மறுத்ததுடன் இயற்கை முறையில் குழந்தையைப் பிரசவிக்க முயற்சி செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே இளம் பெண் மரணமடைய நேரிட்டது என உயிரிழந்த […]

e0aeaae0aebfe0aeb3e0af8de0aeb3e0af88e0aeafe0aebee0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae9ae0aebf e0ae90 e0ae9fe0aebf e0ae85e0aeb4 | Pathivu News செய்திகள்

பிள்ளையானுக்கு சி.ஐ.டி. அழைப்பு நாளை ஆஜராக வேண்டும்

  • Nov 19, 2024 - 09:42 PM
  • 0 Comments

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை நாளை வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு சிஐடியினர் உத்தரவிட்டுள்ளனர். சனல் 4 இன் காணொளியில் பிள்ளையானின் முன்னாள் செயலாளர் வெளியிட்ட பெயரில் பிள்ளையானின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பில் வாக்குமூலத்தை பெறுவதற்காகவே சிஐடியினர் அவரை அழைப்பு விடுத்துள்ளனர்

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp