e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aebee0aeb3e0af8d e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8d e0aeb9e0aeb0e0aebfe0aea9e0af8d | Pathivu News செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

  • Nov 20, 2024 - 11:00 AM
  • 0 Comments

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது கடந்த 11ஆம் திகதி பதுளையில் பொலிஸாருடன் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை பதுளை பொலிஸ் நிலையம் சென்ற போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர் அண்மையில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதுளை நகரில் ’10’ஆம் இலக்கம் கொண்ட சட்டைகளை அணிந்து கொண்டு நடமாடியதால் பொலிஸாருடன் முறுகல்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

e0aeaae0aebfe0aeb3e0af8de0aeb3e0af88e0aeafe0aebee0aea9e0aebfe0ae9fe0aeaee0af8d e0aeb5e0aebfe0ae9ae0aebee0aeb0e0aea9e0af88 e0aea8e0ae9f | Pathivu News செய்திகள்

பிள்ளையானிடம் விசாரனை நடைபெறுகின்றது

  • Nov 20, 2024 - 09:52 AM
  • 0 Comments

பிள்ளையான் என அழைக்கப்படும்; கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர் ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த காணொளியில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். அதில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஈஸ்ட்டர் தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது அங்கு முன்னிலையாகியுள்ளார்.      

e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0aeaae0aebfe0aeb0e0ae9ae0aeb5e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d e0aeaae0af8b | Pathivu News உள்ளூர்

மன்னாரில் பிரசவத்தின் போது இளம் தாய் மரணம். உறவினர்கள் போராட்டம்

  • Nov 20, 2024 - 09:40 AM
  • 0 Comments

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் சேயும் மரணமடைந்துள்ளதால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற இளம் தாயே நேற்று (19) மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சிசேரியன் செய்ய வைத்தியர்கள் மறுத்ததுடன் இயற்கை முறையில் குழந்தையைப் பிரசவிக்க முயற்சி செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே இளம் பெண் மரணமடைய நேரிட்டது என உயிரிழந்த […]

e0aeaae0aebfe0aeb3e0af8de0aeb3e0af88e0aeafe0aebee0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae9ae0aebf e0ae90 e0ae9fe0aebf e0ae85e0aeb4 | Pathivu News செய்திகள்

பிள்ளையானுக்கு சி.ஐ.டி. அழைப்பு நாளை ஆஜராக வேண்டும்

  • Nov 19, 2024 - 09:42 PM
  • 0 Comments

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை நாளை வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு சிஐடியினர் உத்தரவிட்டுள்ளனர். சனல் 4 இன் காணொளியில் பிள்ளையானின் முன்னாள் செயலாளர் வெளியிட்ட பெயரில் பிள்ளையானின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பில் வாக்குமூலத்தை பெறுவதற்காகவே சிஐடியினர் அவரை அழைப்பு விடுத்துள்ளனர்

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0af88 e0ae9ae0aeb0e0af8de0aeb5e0aea4e0af87e0ae9a e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0aeb5e0aebf | Pathivu News உள்ளூர்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் வரை போராடவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

  • Nov 19, 2024 - 09:32 PM
  • 0 Comments

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு நிறுத்துவதற்கான அழுத்தங்களையும இயலுமான வழிகளில் எல்லாம் போராடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய பொறிமுறைகள் உள்ள அனைத்து அரங்குகளில் அநுர தலைமையிலான அரச இயந்திரத்தை நிறுத்தக்கூடிய சாத்தியமான வழிகளில் எங்களுடைய பயணம் இன்னும் தீவிரம் அடையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார் இன்று (19) முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர்தூவி […]

e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeaee0aebfe0aea9e0af8de0ae9ae0aebee0aeb0e0aeaee0af8d e0aea4e0aebe | Pathivu News உள்ளூர்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்த்தர் மரணம்

  • Nov 19, 2024 - 09:16 AM
  • 0 Comments

வவுனியா – ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 59 வயதுடைய குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார் மின்சார தாக்கியதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0ae85e0aea8e0af81e0aeb0 e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aeaee0ae95e0af8de0ae95 | Pathivu News செய்திகள்

ஜனாதிபதி அநுர தமிழ் மக்களை ஏமாற்ற மாட்டார்- சந்திரசேகரன்

  • Nov 17, 2024 - 10:22 AM
  • 0 Comments

தமிழ் மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதும், தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை நிட்சம் நிறைவேற்றப்படும் தேசிய மக்கள் சக்தி, வடகிழக்கில் பெற்றுள்ள வெற்றி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடகிழக்கு வெற்றி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலின்போது, ரணிலும் ; சஜித்தும் தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரித்து பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. ஆகவே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் […]

e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aeb5e0aebfe0aeb0e0af8b | Pathivu News உள்ளூர்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸார் உடந்தை

  • Nov 16, 2024 - 08:20 AM
  • 0 Comments

கிளிநொச்சியின் பல பிரதேசங்களில்; சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுகின்றது என கிளிநொச்சி வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் சட்டவிரோத மணல் அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் விவசாயம் செய்யும் மக்களுக்கு சொந்தமான காணிகளிலும் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் கிளிநொச்சி பொலீஸாருடன் நல்ல உறவில் இருப்பதனால் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொது மக்கள் குற்றம் […]

e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88 e0aeaee0aea3e0af8de0aea3e0aebfe0aeb2e0af8d e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeaee0ae95e0af8d | Pathivu News செய்திகள்

முல்லை மண்ணில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை மக்கள் கொண்டாடினர்

  • Nov 15, 2024 - 01:45 PM
  • 0 Comments

அநுர ஆதரவாளர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வெடிகள் கொழுத்தி மகிந்தனர் தேசிய மக்கள் சக்தி வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது யாழ் தேர்தல் மாவட்டத்தில் 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது  

e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae9ae0ae95e0af8de0aea4e0aebf 123 e0ae86e0ae9ae0aea9e0ae99e0af8d | Pathivu News செய்திகள்

தேசிய மக்கள் சக்தி 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

  • Nov 15, 2024 - 01:18 PM
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை அதிகாரத்தை கைபப்பற்றியுள்ளது இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி தற்போது 68 இலட்சத்து 42 ஆயிரத்து 223 வாக்குகளுடன் 123 பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி எதிர்கட்சி ஆகின்னறது.31 ஆசனங்களை அது கைப்பற்றியுள்ளது தமிழரசுக் கட்சி 06 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp