செய்திகள்

சீனாவிடம் என்ன கோரிக்கை வைப்பது அநுர தீவிர ஆலோசனையில்

  • Dec 29, 2024 - 09:36 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சீன விஜயத்தின் போது இலங்கை முன்வைக்க விரும்பும் எந்தவொரு புதிய திட்டங்களுக்கும் முழு அளவிலான ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது இந் நிலையில், சீனாவிடம் முன்வைக்க உத்தேசிக்கப்படுகின்ற புதிய திட்டங்கள் குறித்து அரசாங்கத்துக்குள் விசேட பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 12ஆம் திகதி சீனா செல்லவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஜனாதிபதியின் சீன விஜயத்தை […]

செய்திகள்

காணிகளை படையினர் ஆக்கிரமித்திருந்தால் அறியத்தருமாறு காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் கோரிக்கை

  • Dec 27, 2024 - 01:11 PM
  • 0 Comments

படையினரின் வசம் மக்களின் காணிகள் இருக்குமாயின் அது பற்றி தகவல்களை அறியத்தருமாறு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார் படையினரின் வசம் உள்ள காணிகளை மக்களுக்காக விடுவிப்பதற்கு படைகளின் ஆளணித்துவத்தை குறைக்க வேண்டும். எதிர்வரும் பெப்ரவரி மாதம் காணி அமைச்சரை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூர்

கிளிநொச்சியில் விபத்து குழந்தை பலி தாய் தந்தை படுகாயம்

  • Dec 25, 2024 - 10:14 PM
  • 0 Comments

கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பலியான அதே வேளை குழந்தையின் தாய் தந்தை மற்றும் சகோதரனும் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்த மூவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மது போதையில் ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி விப்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது விபத்து தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்  

செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

  • Dec 25, 2024 - 10:48 AM
  • 0 Comments

அமைச்சரவை உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுவுக்கான சட்டமூலத்தை தயாரிக்க அனுமதியளித்துள்ளது திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

செய்திகள்

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியை பயனபடுத்தி நிதி மோசடி முறைப்பாடு

  • Dec 25, 2024 - 10:30 AM
  • 0 Comments

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஒரு தரப்பினர் நிதி மோசடி செய்வதாகத் தெரிவித்து அது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்ததன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஒரு தரப்பினர் இந்த நிதி மோசடிகளை செய்துள்ளனர். […]

இந்தியா செய்திகள்

மத்திய பட்ஜெட் :பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!

  • Dec 25, 2024 - 02:57 AM
  • 0 Comments

இந்தியாவின் வரவு செலவு திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பாதீடு; அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பாதீட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பாதீடு தயாரிப்புக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பொருளாதார வல்லுநர்கள் […]

உள்ளூர் செய்திகள்

சட்டவாட்சி பலமடைந்தால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்- சிறிநேசன் எம்.பி

  • Dec 25, 2024 - 02:14 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவாட்சியைப் பலப்படுத்தப் போவதாகக் கூறியுள்ள நிலையில் அதனை நடைமுறைபடுத்தினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். சட்டவாட்சி பலமடைந்தால், பாரிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்; ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்கக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளார். […]

செய்திகள்

முன்னாள் அமைச்சர் டக்ளசின் அடி தொடர்கிறார் சிறிநேசன் எம்பி.

  • Dec 23, 2024 - 01:27 PM
  • 0 Comments

கிளீன் சிறிலங்காவின் ஆணைக்குழுவானது ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த 18 உறுப்பினர்களும் சிங்களவர்களாகவே உள்ளனர். தமிழர்களோ முஸ்லிங்களோ அதில் இல்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கவலை தெரிவித்துள்ளார் பல்லின சமூகங்கள் உள்ள இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்தவர்கள் இடம்பெறாத நிலைப்பாடு தமிழ் பேசும் சமூகத்தவர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறுதான் கடந்த பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தின் காலத்தில் கோத்தபாய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட […]

உள்ளூர் செய்திகள்

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!

  • Dec 23, 2024 - 01:36 AM
  • 0 Comments

சட்டத்தின் ஆட்சியையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் பெசில் பெர்னாண்டோ எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, இந்நாட்டில் சட்ட சீர்திருத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான மூன்று விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றங்களில் கடுமையான குற்றவியல் வழக்குகளை தினசரி விசாரணை […]

செய்திகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

  • Dec 20, 2024 - 06:04 PM
  • 0 Comments

நத்தார் மற்று புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் திருடர்கள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காண சிவில் உடையில் 500க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட மத […]