செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

எல்லை தாண்டிய 12 இந்திய மீனவர்கள் மன்னாரில் கைது..!

எல்லை மீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை, மன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

அத்துடன், குறித்த மீன்பிடிப் படகிலிருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னாரிற்குத் தெற்கு திசையில் இந்நாட்டு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இந்த இந்திய மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்கள் குழுவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்வள ஆய்வு அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp